Skip to main content

Posts

Showing posts from March, 2016

ஓ மனிதா…

ஓ மனிதா …!  இம்மண்ணில் வந்து சற்றே தங்கிச்செல்பவன் நீ… மிடிமையால் இழிவடைந்தவன்…  அதிகாரத்தால் சீரழிந்தவன்… உன்னை அறிந்தவர் அருவருத்து விலகுவர்.… உயிர்கொண்ட புழுதியின் தரம்கெட்ட குவியல் நீ.… உனது அன்பு வெறும் ஆசை…. உனது நட்போ ஏமாற்று.… உனது புன்னகை போலி.…  உனது சொற்களோ மோசடி.… இயற்கையிலேயே கீழ்மையானவன் பெயரால் மட்டுமே உயர்ந்தவன்.… உன் சொந்தங்களாகிய ஒவ்வொரு மிருகமும் உன்னை வெட்கத்தால் கூசிச்சிவக்கச் செய்யும்… தற்செயலாக இந்த எளிய கலத்தை வாங்கிக் கொண்டவனே அதை கைமாற்று.… இது நீ துயரம் கொள்ள விரும்பும் எவரையும் கொண்டிருக்கவில்லை… ஒரு நண்பனின் மிச்சங்களை அடையாளம் செய்ய எழுந்துள்ளன இந்த நடுகற்கள் வேறொன்றுமில்லை…. ஆம் இதோ அவன் கிடக்கிறான்…!!!