Skip to main content

காதல் என்றால் என்ன…???



காதல் என்றால் என்ன…???

என்று என்னையே
கேட்டுக்கொள்கிறேன்…!!!

நம் ஆளுமை திரவமாக
கரைந்து…

புகையாக உருவிழந்து…

இன்னொருவரை முழுமையாகச்
சூழ்ந்துகொள்ளுதல் என்று சொல்வேன்…

ஆணவம் அழிந்து…

தன்னிலை கரைந்து…

பிறிதொருவருக்காகவே…

ஒவ்வொரு கணமும்
வாழ்ந்துகொண்டிருத்தல் என்பேன்…

நீங்க அதைப் புரிந்துகொள்வீர்களா…???

பெண்களுக்கும் காதல் என்றால்
அப்படித்தானா…?

தெரியவில்லை.…!!!

ஏன்
என்னுடைய உணர்வுகள்தானா பிறருக்கும்…???

என்னுடையது ஓரு மனச்சிக்கலா…???

நான்
சறுக்கிச் சென்று கொண்டே இருந்த என்
பாதையை அஞ்சி அழுத்தமாகப்
பிடித்துக் கொண்டேனா…???

சமநிலையிழந்த  எந்த
சிந்தனைகளையும் மனச்சிக்கல் என்று
சொல்பவர்கள் உண்டு….

அப்படியானால்…

இதுவும் ஒரு மனச்சிக்கல்.…

ஒரு மனநோய்…

என் நண்பன்  என்ன சொல்வான்…???

காமம் என்று
சொல்வான்.…???

அவனைப்போன்ற அறிவுஜீவிகள்
எதையும் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள
முயல்பவர்கள்.…

எல்லாவற்றையும் திட்டவட்டமாக
ஆக்கிக் கொள்ள முடியாதென்பதையே
அறியாதவர்கள்.…

திட்டவட்டமாக ஆக்கிக்
கொள்ளும் போது ஒவ்வொன்றும்
எளிமைப்படுத்தப்படுகின்றன, நிலைக்க
வைக்கப்படுகின்றன என்பதை அறியாதவர்கள்.…

நீரை கையில் எடுக்க அதை பனிக்கட்டியாக
உறைய வைக்க வேண்டும்….

காமமா…???

இருக்கலாம்…

நீங்களூம் அதையே
சொல்லலாம்.…

ஆனால் …

இல்லை இல்லை இல்லை…

என்றே நான் ஆவேசமாகக் கூவுவேன்.…

காமத்தை நான் அறிந்திருக்கிறேன்.…

காட்டுத்தீபோன்று …

சூழ்ந்தெரியும் காமத்தை….

கடந்த மூன்று வருடங்களாக அதன்
அனல்காற்றின் வெம்மையில் ஒவ்வொரு
கணமும் வாழ்ந்துகொண்டிருப்பவன் நான்.…

காமத்தில் சுயசமர்ப்பணம் இல்லை…

காமத்தில்
தியாகம் இல்லை….

காமத்தில் நாம் ஒரு கணம்
கூட இல்லாமலாவதில்லை…

காமத்தில்
நாம் எதையுமே கொடுப்பதில்லை….

அதில்
நாம் ஒவ்வொரு கணமும் நம்மையே
பார்த்துக்கோண்டிருக்கிறோம்.…

சதுரங்கம்
விளையாடும் ஆட்டக்காரன் இம்மியேனும்
தன்னை மறப்பானா என்ன…???

அவன் முன்
பரப்பப்பட்டிருக்கும் சதுரங்கக்காய்கள்
உண்மையில் பருவடிவம் கொண்ட அவனுடைய
மனம்தான் அல்லவா…???

காமம் ஒரு முடிவிலாத போர்.…

அங்கே
வெலவது ஒன்றே இலக்கு என இரு உடல்கள்
போராடுகின்றன….

உள்ளத்தை ஆயுதமாக
ஆக்கி உடல் நிகழ்த்தும் சமர் அல்லவா அது…???

காமத்தில் முன்வைக்கபப்டும் ஒவ்வொன்றும்
பிறிதொன்றே.…

காமத்தில் சொல்லபப்டும்
ஒவ்வொன்றும் சொல்லப்படாத ஒன்றே.…

பாம்பு எடுக்கும் படத்தை நம் ஏன்
அஞ்சுகிறோம்…???

அது அழகானதுதான்.…

ஆனால்…

அது விஷம் என்பதன் வேறு ஒரு தோற்றம்…

காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே
மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில்
நிற்கக் காண்கிறோம்…

ஆனால்…

நான் கற்ற கல்வியும் நான் வாசித்த
நூல்களும் என்னை கைவிடுகின்றன.…

நான்
சொல்லிச் சொல்லி வந்து என்ன சொல்கிறேன்
என்ற திகைப்பின் முனையில் நின்று
கொண்டிருக்கிறேன்.…

இதை மட்டும்
சொல்கிறேன்.…

காமம் வண்ண ஆடைகளில்,
மின்னும் அணிகளில் தன்னை
வெளிப்படுத்திக் கொள்வது.…

காதல்
அம்மணக்குழந்தை போல களங்கமில்லாத
அப்பட்டம்…!!!

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...