Skip to main content

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன்...

நான் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன்
நான் தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். 

எனது நண்பன்
G. பாலமுருகன்

எனக்கு உங்களின் அறிமுகம் எனது நண்பன் G. பாலமுருகனால் கிடைத்தது.

உங்களுடைய அக மற்றும் புற புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.

ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. 

ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பிறகு காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி, அனல் காற்று, இன்றைய காந்தி, விஷ்ணுபுரம், கன்னி நிலம்,  பின் தொடரும் நிழலலின் குரல் என நாவல்கள். மற்றும் அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. 

ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது. 

உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் இருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று.

முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை நெருக்கமாக உணர முடியுமா என்கிற அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அடுத்த அடி,ஜகன்மித்யை. அதில் வரும் பெரியவரும் போதியில் வரும் குருவும் வேறு வேறு வேறான ஆள் என என்னால் நம்ப முடியவில்லை.

வாழ்வின் முடிவில்லாத் துயரத்தை, தாங்கள் தொலைத்த நாட்களைப் பேசும் மனிதர்கள். சிவமயம், வனம், வீடு என குறுக்கு வெட்டாகப் படித்தபடி லங்கா தகனத்துக்கு வந்து சேர்ந்தேன். ஒரு கதையைப் படிக்கும்போது மனிதனுக்கு பீதி உண்டாகும் எனச் சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன் ஆனால் இப்போது நம்புகிறேன். ஒரு குரங்கினைப் போல ஆசான் தாவியபடி வந்து கொண்டிருந்தார் என்கிற கடைசி வரி இன்னமும் எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதையை வளர்த்துப்போய்.. ஆசானின் மாற்றத்தை வாசிப்பவனுக்குக் கடத்தி, என்ன நடக்கப் போகிறது என்பதற்கான கண்ணிகளை மட்டும் ஆங்காங்கே கொடுத்துக் கடைசியில் ஒரு திறந்த முடிவாகக் கதை முடிந்தபோது ஆவென்றிருந்தது.

படித்து முடித்தவுடன் என் நண்பனூக்கு நான் அலைபேசியில் சொன்னது  என்னமா எழுதி இருக்க இருக்கார் என்று.

சத்தியமாக முடியவில்லை சார். அற்புதமான ஒரு அரசனின் வருகையைத் தெரிவிக்கும் கதை. இந்த ஒரு கதை போதும் மொத்தத் தொகுப்புக்கும். படித்து முடித்தவுடன் உங்களிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணினேன். ஆனால் என்ன உளறுவேனென்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இதை எனது Blogger-ல் எழுதி கொண்டிருக்கிறேன்.

தொகுப்பு முழுதுமே வெவ்வேறு தளங்களில் இயங்கும் கதைகள். இவற்றை இருபது வருடத்துக்கு முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்பதுதான் நம்பமுடியவில்லை.

மேலும் நீங்கள் உங்கள் தளத்தில் எழுதி வரும் வெண்முரசு அனைத்து மகாபாரத கதையை தொடர்ந்து அதாவது 2014 ஆண்டில் இருந்து வாசித்து வருகிறேன்.



மேலும் கொரோனா Lockdown காலகட்டத்தில் நீங்கள் எழுதிய அனைத்து சிறுகதை தொகுப்பும் சாலச்சிறந்தது.

உங்கள்  தொகுப்புகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எந்த காலகட்டத்திலும் வாசிக்கலாம்.

நன்றி.


Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...