Skip to main content

என் ஆன்மாவும் உடலும் பேசியபோது


 தென்றல் போல் மரணம் உடலை தழுவி ஆன்மாவை அழைத்து செல்லும்...

மரணம் பயமா...? 

இல்லை அதிசயம்....

பிறப்பு மாதிரி இறப்பும் அதிசயம்...

இந்த உடலைப் பார்க்கும்போது இந்த ஷணம் அதிசயம்தான் "ஹா" என்று நிற்கிறது...

எனக்கு மரணம் உண்டு இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ...

ஒரு நாள் என் இருப்பு வெற்றிடமாகும். என் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, கோபம், தாபம், மோகம் எல்லாம் பொய்யாகும். 

ஒருவேளை பயம் மட்டும் என்னோடு வரும்மா...?

ஒருவேளை உயிரின் ஒரே குணம் பயமோ...? 

அடுத்தது என்ன என்கிற பயம் தொடருமோ...? 

மறுபடி மறுபடி பிறந்தது என்கிறார்களே, அதுபோல மறுபடி எங்கே பிறக்கப் போகிறோம் என்கிற பயம் உயிருடன் ஒட்டியிருக்குமோ...? 

அப்போது பேரானந்தம் என்பது என்ன...? 

அட எது வேணா நடக்கட்டும் என்கிற நிலையா...? 

எப்ப வேணா நடக்கும் என்கிற தெளிவா...? 

எது நடப்பினும் சரி என்கிற குணமா...?

இந்த ஷணம் எனக்குள் அப்படித்தான் இருக்கிறது...

எவரோடும் எதனோடும் ஒட்டாத நிலை இருக்கி  

இருக்கிறது... 

இப்படி நடந்திடும் எனக்கு என்று அழுகையில் எதிர்ப்பு காட்டிப் போராடுகிற குணமும் இல்லை...

அப்பா... இது விடுதலை என்று போற்றுகிற குணமும் இல்லை...

சும்மா வேடிக்கை பார்க்கிற குணம் சட்டென்று வந்து விட்டது...

இது சட்டென்று வந்த குணமா...? 

செங்கல் செங்கல்லாய் அடுக்கி வளர்ந்த ஞானமா...?

ஆம் இந்த ஞானம்தான் என் ஆன்மாவையும் உடலையும் ஒரே நேர்கோட்டில் வைத்து...

எப்போதும் நான் என்கிற என்னை அனுபவத்தின் வழியாக இன்னும் இன்னும் என்று...

என் வாழ்க்கையை வாழ சொல்கிறது...!!!

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...