காதல் என்றால் என்ன…??? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்…!!! நம் ஆளுமை திரவமாக கரைந்து… புகையாக உருவிழந்து… இன்னொருவரை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளுதல் என்று சொல்வேன்… ஆணவம் அழிந்து… தன்னிலை கரைந்து… பிறிதொருவருக்காகவே… ஒவ்வொரு கணமும் வாழ்ந்துகொண்டிருத்தல் என்பேன்… நீங்க அதைப் புரிந்துகொள்வீர்களா…??? பெண்களுக்கும் காதல் என்றால் அப்படித்தானா…? தெரியவில்லை.…!!! ஏன் என்னுடைய உணர்வுகள்தானா பிறருக்கும்…??? என்னுடையது ஓரு மனச்சிக்கலா…??? நான் சறுக்கிச் சென்று கொண்டே இருந்த என் பாதையை அஞ்சி அழுத்தமாகப் பிடித்துக் கொண்டேனா…??? சமநிலையிழந்த எந்த சிந்தனைகளையும் மனச்சிக்கல் என்று சொல்பவர்கள் உண்டு…. அப்படியானால்… இதுவும் ஒரு மனச்சிக்கல்.… ஒரு மனநோய்… என் நண்பன் என்ன சொல்வான்…??? காமம் என்று சொல்வான்.…??? அவனைப்போன்ற அறிவுஜீவிகள் எதையும் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முயல்பவர்கள்.… எல்லாவற்றையும் திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ள முடியாதென்பதையே அறியாதவர்கள்.… திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் எளிமைப்படுத்தப்படுகின்றன, நிலைக்க