பாலிமர் நியூஸில்....பரபரப்பான தேனி பழைய பேருந்து நிலையம் நேரு சிலை அருகில் தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மட்டும் அவருடைய இரண்டு குழந்தைகள் மர்ம நபரால் சுட்டுக் கொலை. கொலையாளி கூட்ட நெரிசலில் தப்பி ஓட்டம். கொலையாளியை பிடிக்க தேனி காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. அம்மா சமையலறையில் இருந்து "டேய் பிரதீப் மணி ஆறு ஆக போவுது இந்த நியூஸ் பாக்காம எந்த வேலையும் செய்றதா இல்லை நீ, நானும் தினம் தினம் சொல்லிட்டு தான் இருக்கேன் தயவுசெய்து போலீஸ் ஆகற கனவை விட்டுட்டு ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சா தான் உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு குடுப்பாங்க, உங்க அப்பாவும் போலீஸ் வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆகப் போறாரு எனக்கும் வயசு ஆயிடுச்சு அதுக்கு மேல உன் தங்கச்சி இருக்கா பாத்துக்கோ" சமையலறையில் அப்பாவிற்கு டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டி கொண்டே அம்மா கத்திக் கொண்டு இருந்தாள். "அம்மா சொல்றத பெருசா எடுத்துக்க வேணாம் அண்ணா" பிரதீப்புக்கு காப்பியை கொடுத்து விட்டு சென்றால் அ