மகேந்திரன் & வினோத்
நான் எனது இந்த இரண்டு நண்பர்களின் அவர்களின் சதுரகிரி பயண அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது...
நான் 2016 ஆண்டில் நான் சதுரகிரி பயணம் சென்றது என்கண்முன்னே வருகிறது...
இதை படிக்கும் அனைவருக்கும் இங்கு பயணம் செய்தவர்களுக்கும் இனிமேல் பயணம் செய்ய விரும்புவர்களுக்கும் மகேந்திரன் & வினோத் பயணங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்...
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்...
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்...
சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்...
அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான்சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு...
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது...
இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்...
சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
சதுரகிரியும் மற்றும் திருவண்ணாமலையும் எத்தனை முறை சென்றாலும்...
ஒவ்வொரு முறையும் அதன்
ஒவ்வொரு முறையும் அதன்
பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை...
இன்று மகாலிங்க மலையைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை.. உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்...
நாங்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை இரவு கந்தர்வகோட்டையில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டை மறுநாள் காலையில் சனிக்கிழமை அடைந்தோம்...
பிறகு அங்கு இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸில் சென்று தாணிப்பாறை விலக்கில் இறங்கினோம் ...
பிறகு ஆட்டோவில் அங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்று சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை அடைந்தோம்...
வாருங்கள் இனி நாம் நம் பயணத்தை துவங்கலாம்...
சதுரகிரி அமைப்பு...
திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்...
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்...
சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்...
அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான்சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு...
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது...
இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்...
இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது...
இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.
இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது...
இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி...
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்...
இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது...
இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி...
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்...
பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து பின் நாங்கள் மலை ஏற துவங்கி னோம் ...
போகும் வழியில் கடவுளை தரிசிக்க குழந்தை கள் முதல் வயதானவர்கள் வரை மகாலிங்க கடவுள் பெயரை செல்லிகொண்டே மலையேறும்போது அந்த பக்திக்கு மிக அதிகமான ஆற்றல் இருப்பதாக உணர்தோம்...
*****நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
போகும் வழியில் கடவுளை தரிசிக்க குழந்தை கள் முதல் வயதானவர்கள் வரை மகாலிங்க கடவுள் பெயரை செல்லிகொண்டே மலையேறும்போது அந்த பக்திக்கு மிக அதிகமான ஆற்றல் இருப்பதாக உணர்தோம்...
ஓர் இடத்தில் மரத்தில் சித்தர் தரிசனம் கிடைத்த து. அது இயற்கை யாகவே உருவாக்கி இருந்தது...
பிறகு நாங்கள் இறுதியில் மலை உச்சியில் உள்ள மாகலிங்க கோயிலை அடைந்தோம்...
மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை எடுத்து கொண்டுடோம்.
*****நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
Comments
Post a Comment