வெவ்வேறுவகையான ஊர்கள் வழியாகக் கடந்துசெல்வது மிக அவசியமானது...
இளமையில் தான் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து அறியாச்சூழலுக்கு வாழ்வுதேடிச் செல்பவன் ஒரு பெரிய அனுபவத்தை அடைகிறான்...
அந்தக் கிளர்ச்சியும், கொண்டாட்டமும் வாழ்க்கையில் வேறெப்போதும் வராது...
அவன் தன்னுடைய சாத்தியக்கூறுகளை கண்டடைகிறான்...
அது தன்னைத்தானே கண்டடைதல்...
என் வாழ்க்கையில் நான் பல ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன்...
இளைஞனாக அலைந்து திரிந்த ஊர்கள் தேனி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பதி & குஜராத் என பல.
அது தவிர இப்போது அலைந்துகொண்டேதான் இருக்கிறேன்...
என் ஒவ்வொரு பயணமும் ஒரு துளிவாழ்க்கைதான்...!
Comments
Post a Comment