"புத்தகம்"
எழுதிய ஒரு வரி
உன்னுள்ளே
ஒரு புத்தகத்தகமாய்
விரியுமானால்
அது அறிவுரை இல்லை
ஆலம் வித்து...
பக்கங்களில் நிரம்பி
வழியும் வார்த்தைகளல்ல
ஒவ்வொரு வார்த்தைக்குள்
நிரம்பி வழியும் அறிவு...
புதிய நண்பன்
வேண்டும் என்று
நினைக்கும் போதெல்லாம் ,
புதிதாய் புத்தகம் ஒன்றை
வாங்குகிறேன்....
கால இயந்திரத்தில் ஏறி வேறுவேறு காலங்களுக்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தையே புத்தகங்களும் தருகின்றன...
என் வாழ்க்கை கால அளவில் மிகச்சிறியது. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கைகளை, பல்லாயிரம் அனுபவங்களைப் புத்தகம் வழியே அனுபவித்துவிட முடிகிறது. ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் துணையிருப்பது போலச் சிறந்த புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது...
விலை கொடுக்க
முடியாதது
நட்பு
என்றார்கள்.
சிறந்த நட்பிற்கு
விலை கொடுத்துவிட்டேன்...
"புத்தகம்".
Comments
Post a Comment