நம்மில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த கடவுளாக பிள்ளையார் திகழ்கிறார்.
சிறு வயதில், பிள்ளைகள் சேர்ந்து விளையாடும் போது, பலரும் விநாயகர் சதுர்த்தி வரும் போது அவர்களே களிமண்ணால் பிள்ளையார் செய்து அதை அலங்கரித்து, வணங்குவது, ஊர்வலமாக எடுத்துச் செல்வது என விளையாடி மகிழ்வது வழக்கம்.
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் தெய்வங்களில் முதல்வராக விளங்குகிறார்.
இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர்.
எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு...
அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர்.
எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு’ என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர்.
விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர்.
சதுர்த்தி நாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.
விநாயகர் சதுர்த்தி அன்று மிக உற்சாகமாக நடனம் ஆடி அவரை வணங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது .
இறுதியில் விநாயகர் பெருமானை ...
நன்றி.
Comments
Post a Comment