கருவறை
கருவானவளே…!!!
எனக்கே
தெரியாமல்
என்னை
அறிந்தவளே…!!!
என்னை
மாயம்செய்ய
மண்வாசனையாய்
வந்தவளே…!!!
எரிமலையென
வெடித்து
என் இதயத்தை
வெடிக்க செய்து
வெட்டவெளிக்கு
அழைத்தவளே…!!!
உன் வெள்ளி
சிறு சிறு
மணிதுளியால்
உன்னுடன்
துள்ளி துள்ளி
ஆடசெய்தவளே…!!!
என் சரீரம்
எல்லாம்
தழூவி தழூவி
வருடி வருடி
வழிந்தவளே…!!!
என்னை
மட்டும்
துடி துடிக்க
விட்டு விட்டு
சமூத்திரத்தில்
கலந்துவிட்டவளே…!!!
நான் மட்டும்
களிமண்
மனிதனாய்
இருந்திருந்தால்
அப்போதே
கரைந்து
உன்னோடு
சங்கமித்திருப்பேன்
நிரந்திரமாக…!!!
*****இப்போது நான் ஒரு களிமண் மனிதன்…
Comments
Post a Comment