தாய்
குழந்தை
பிறந்தவுடன்
பார்த்து மகிழ்ந்து
பரவசம் அடைந்து
ரசிப்பது போலவே
நானும் உன்னை…!!!
சிறு காற்று
துளிர்
காம்பில் பட்டு
சிரித்தபோது
அந்த அழகை
ரசிக்கசெய்கிறாய்…!!!
உதிர்ந்த பூக்களின்
வாசத்தையும்
மலர்ந்த பூக்களின்
தேனையும்
தேணீயுடன்
சண்டையிடசெய்கிறாய்…!!!
இளஞ்சூட்டு
காற்றை
சுவாசித்து கொண்டே
நெடுந்தூரம்
நடைபயணிக்கசெய்து
இளைமையாய்
இருக்கசெய்கிறாய்…!!!
சிறுச் சிறு
வியர்வை துளியை
முதுகு மையத்தில்
ஓடச் செய்து
என்னை உச்சத்தில்
சிலிர்கச்செய்கிறாய்…!!!
எனக்கு தெரியும்
என் காலடியில்
கிடக்கும்
உதிர்ந்த பூ போல்
நானும் ஒருநாள்
உதிர்வேண் என்று
அதுவரைக்கும்
உன்னை
ரசிக்காமல்
விடமாட்டேன்…!!!
*****வருகிறேன் காலை இருந்தால்…!!!
Comments
Post a Comment