ஒவ்வொரு கணமும் அழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இந்த பிரபஞ்சம்... வலி என்பது அழிவை நாம் அறியும் ஒரு விதம்... மெல்லமெல்ல சீராக ஒலிக்கும் அழிவின் மந்திரம் அது... வலியை ஒரு தாளம்போல கவனித்தபடிக் கிடக்க வேண்டும்... வலி என்று நாம் சொல்வது நம் மனம் உணரும் ஒரு பொறுக்க முடியாத நிலையே... அந்த நிலை உடல் உறுப்பில் இருந்து மனதுக்கு செல்கிறது... வலி மனிதர்களை அவர்கள் தங்களைப்பற்றி கொண்டிருக்கும் கற்பனைகளை எல்லாம் களைந்துவிடுகிறது. வலி மனிதர்கள் உண்மையில் எத்தனை தனியர்கள் என்று அவர்களுக்குக் காட்டுகிறது... வலி மனிதர்களுக்கு மனம் என்பது உடலில் இருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறது என்று தெளிவாக்குகிறது... வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே... வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன... எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது... அந்த வலியை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது... அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது... *****அனைத்து வலிகளில் இ