சோறே தெய்வம்...
இது அனைவரும் அறிந்த ஒன்று தான்...
அன்றாடத்தில் உழல்வதால் நாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை...
பசியைக் கூட இப்பொழுது பெரிதாக பொருட்படுத்துகிறார்களா என்ற ஒரு சந்தேகம் உண்டு...
பசி அதற்குப்பின்னான சோறு...
இவ்விரண்டையும் ஒரு நாடகியத் தருணமாகவே நான் எடுத்துக்கொள்வேன்...
சிறிது பசியெடுத்தாளும் அதைப் பெருமளவு என்னுள் வளர்த்துக்கொள்வேன்...
ஏனென்றால் அந்த வேலை கிடைக்கப்போகும் சோற்றை அமிர்தமாக்குவது அதுதான்...
சுடுச்சோற்றை வடித்தவுடனே, தட்டிலில் கொட்டி கையை விரித்து அதனருகே கொண்டு செல்வேன்...
அதிலிருந்து வரும் வெம்மையான ஆவி நரம்புகளை மேலும் சுண்டச்செய்து பசியை ஒருபடி மேலே கொண்டு செல்லும்...
அப்பொழுது அருந்தும் முதற்கவலம் பெரும்பேறு...
இந்த பசியைப் போக்க கவித்துவமான உச்சம் தேவைப்படுகிறது...
சோறு தான் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறது...
பெரும்பசியின் இறுதியில் உண்ணும் முதல் கவலம் சோறு வரவழைக்கும் ஆற்றவல்லா கண்ணீரை நினைவுபடுத்துகிறது...
சோறு அளிக்கும் மிகப்பெரும் கொண்டாட்டம் அளப்பரியது...
சோறு என நாம் சொல்லும் இப்பொருள் நமக்கு ஒரு வயசில் அறிமுகமாகி சாகும் நாள் வரை கூடவே இருக்கிறது...
அது நமக்கு ஒன்றேதான் பொருளை அளிக்கிறது என்று நினைக்கிறோம்...
ஆனால் அதன் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது...
சிலசமயம் சட்டென்று ஒரு பெரிய அனுபவத்தில் அதன் அர்த்தம் முழுமையாகவே மாறிவிடுகிறது...
பசியை அறிந்தவனே சோறை அறியமுடியும்...
சோறே தெய்வம்.
Comments
Post a Comment