Skip to main content

சபர்மதி ஆசிரமம் - அகமதாபாத்



சபர்மதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட இந்த ஆஸ்ரமம் தன்னுள் பல விஷயங்களை பூட்டி வைத்திருக்கிறது.



இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட பல விஷயங்கள் இங்கே நடந்திருக்கின்றன. ஆஸ்ரமம் இன்றைக்கும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே – அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம் – மகன் நிவாஸ் – மகன்லால் காந்தி – காந்திஜியின் சொந்தம் இவர் – இந்த ஆஸ்ரமம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். இராட்டையில் புதிய விதங்களை உருவாக்கி காதி உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். இவர் இறந்த போது மஹாத்மா காந்தி – நான் விதவையாகி விட்டேன் என்று சொல்லி இருக்கிறாராம் !




ஹ்ருதய குஞ்சம்:ஆஸ்ரமத்தில் காந்திஜி தங்கிய குடில். இங்கே தான் 1918-ஆம் வருடம் முதல் 1930-ஆம் வருடம் வரை தங்கி இருந்தார் காந்திஜி! இங்கே தான் அவர் தேசியத் தலைவர்களையும் வேற்று நாட்டு தலைவர்களையும் சந்த்தித்தார். 1930-ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடையும் வரை இங்கே திரும்புவதில்லை என்ற சபதத்துடன் சென்றாராம். 












































குடில் என்று சொன்னாலும், இதில் மொத்தம் ஆறு அறைகள்! காந்திஜியின் அறை, கஸ்தூரிபா காந்தியின் அறை, விருந்தினர் அறை, சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அறை மற்றும் அலுவலகம். காந்திஜி பயன்படுத்திய பல பொருட்கள் – சில அசல், சில நகல் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.





























































வினோபா-மீரா குடிர்: வினோபா பாவே இந்த இடத்தில் தான் 1918-ஆம் வருடம் முதல் 1921-ஆம் வருடம் வரை தங்கியிருந்தார். Bபூதான் அந்தோலன் இங்கிருந்து தான் ஆரம்பிக்கப்பட்டது அவரால். அதன் பிறகு ஆங்கிலேய அட்மைரல் ஒருவரின் மகளான Madeline Slade – காந்தியால் மீரா என அழைக்கப்பட்டவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இங்கேயே 1925 முதல் 1933-ஆம் ஆண்டு வரை தங்கி ஆஸ்ரமத்தின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.

காந்தி நினைவு அருங்காட்சியகம்: இந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர் லால் நேரு அவர்களால் 1963-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது இந்த அருங்காட்சியகம். இதற்குள் மூன்று பிரிவுகள் – Gandhi in Ahmedabad Gallery, Painting Gallery மற்றும் My Life is My Message Gallery – கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம்.
நிறைய விஷயங்கள் இங்கே பார்க்கலாம். அமைதியான சூழலில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த ஆஸ்ரமத்தில் இன்றைக்கும் பலவித பயிற்சிகள், நடவடிக்கைகள் இருக்கின்றன. ஒரு பெரிய நூலகமும் இங்கே உண்டு. ஒவ்வொன்றாகப் பார்த்து வரலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் இராட்டை கூட சுற்றலாம்! ஒரு பெண்மணி அமர்ந்து இராட்டையைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். நீங்கள் விரும்பினால் அவர் உங்களுக்கும் சொல்லித் தருவார். இப்படியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் ஒரு அறிவிப்புப் பலகை – இங்கே இருக்கும் தபால் பெட்டியில் போடும் தபால் அட்டையில் சர்க்கா அதாவது இராட்டை வடிவம் பொறித்து அனுப்பப்படும் – சாதாரண வட்ட வடிவ Seal போல இல்லாது இராட்டை வடிவ Seal வைத்து அனுப்புவார்கள் என தகவல் தெரிவித்தது. அதற்கான தபால் அட்டைகளும் ஆஸ்ரமத்திற்குள்ளேயே கிடைக்கிறது.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம