நான் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன் நான் தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். எனது நண்பன் G. பாலமுருகன் எனக்கு உங்களின் அறிமுகம் எனது நண்பன் G. பாலமுருகனால் கிடைத்தது. உங்களுடைய அக மற்றும் புற புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன். ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி, அனல் காற்று, இன்றைய காந்தி, விஷ்ணுபுரம், கன்னி நிலம், பின் தொடரும் நிழலலின் குரல் என நாவல்கள். மற்றும் அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது. உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் இருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று. முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை ந