எடுத்த எடுப்பிலேயே தழுவி
எல்லாம் முடிந்திருந்தால்
ஏமாற்றம் மிகுந்திருக்கும்...
எவ்வளவு ஏக்கத்தை கடந்து
எத்தனை பக்கங்கள் தாண்டி
எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது....
நீர் நிறைந்த ஆற்றின் மேலோட்டத்தில் சில சலனங்கள் சில கொந்தளிப்புகள் மட்டும் தெறியும்...
காற்றின் வேகத்தில் சிலசமயம் மேலே அதன் சிலிர்புகளையும் காணமுடியும்...
இயற்கை தன்னை என்றும் அழித்துக் கொள்ள நினைப்பதில்லை...
மாறாக பெரும்உருவாக விரிந்து வளர்ந்து செல்லவே நினைக்கிறது...
ஒவ்வொரு துளியிலும் வளர்ச்சி என்ன என்பதை காண துடித்துக் கொண்டிருக்கிறது...
அதன் அழிவிலிருந்து தன்னை மறுஆக்கம் செய்து கொள்கிறது...
அதன்முன் மண்டியிட்டு தன்னை காத்துக்கொள்ள துடிக்கிறான் மனிதன். ..
இயற்கையாக மாறும் ஒருவனே இயற்கையின் ஒன்றான காட்டில் வாழமுடியும், சாகவும் முடியும்...
வாழ்க்கைப் பயணத்தில் உச்சங்கள் மட்டுமே அமைவதில்லை, தோல்வியும் கீழ்மையும் கூடவே வருகிறது...
ஆனால் வாழ்க்கை வசீகரிக்கவே செய்கிறது...
பயணத்தை மீண்டும் மீண்டும் செல்ல தூண்டுகிறது...!!!
Comments
Post a Comment