நான் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன்
நான் தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன்.
எனது நண்பன்
G. பாலமுருகன்
G. பாலமுருகன்
எனக்கு உங்களின் அறிமுகம் எனது நண்பன் G. பாலமுருகனால் கிடைத்தது.
உங்களுடைய அக மற்றும் புற புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.
ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு.
ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
பிறகு காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி, அனல் காற்று, இன்றைய காந்தி, விஷ்ணுபுரம், கன்னி நிலம், பின் தொடரும் நிழலலின் குரல் என நாவல்கள். மற்றும் அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது.
உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் இருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று.
முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை நெருக்கமாக உணர முடியுமா என்கிற அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அடுத்த அடி,ஜகன்மித்யை. அதில் வரும் பெரியவரும் போதியில் வரும் குருவும் வேறு வேறு வேறான ஆள் என என்னால் நம்ப முடியவில்லை.
வாழ்வின் முடிவில்லாத் துயரத்தை, தாங்கள் தொலைத்த நாட்களைப் பேசும் மனிதர்கள். சிவமயம், வனம், வீடு என குறுக்கு வெட்டாகப் படித்தபடி லங்கா தகனத்துக்கு வந்து சேர்ந்தேன். ஒரு கதையைப் படிக்கும்போது மனிதனுக்கு பீதி உண்டாகும் எனச் சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன் ஆனால் இப்போது நம்புகிறேன். ஒரு குரங்கினைப் போல ஆசான் தாவியபடி வந்து கொண்டிருந்தார் என்கிற கடைசி வரி இன்னமும் எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதையை வளர்த்துப்போய்.. ஆசானின் மாற்றத்தை வாசிப்பவனுக்குக் கடத்தி, என்ன நடக்கப் போகிறது என்பதற்கான கண்ணிகளை மட்டும் ஆங்காங்கே கொடுத்துக் கடைசியில் ஒரு திறந்த முடிவாகக் கதை முடிந்தபோது ஆவென்றிருந்தது.
படித்து முடித்தவுடன் என் நண்பனூக்கு நான் அலைபேசியில் சொன்னது என்னமா எழுதி இருக்க இருக்கார் என்று.
சத்தியமாக முடியவில்லை சார். அற்புதமான ஒரு அரசனின் வருகையைத் தெரிவிக்கும் கதை. இந்த ஒரு கதை போதும் மொத்தத் தொகுப்புக்கும். படித்து முடித்தவுடன் உங்களிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணினேன். ஆனால் என்ன உளறுவேனென்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இதை எனது Blogger-ல் எழுதி கொண்டிருக்கிறேன்.
தொகுப்பு முழுதுமே வெவ்வேறு தளங்களில் இயங்கும் கதைகள். இவற்றை இருபது வருடத்துக்கு முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்பதுதான் நம்பமுடியவில்லை.
மேலும் நீங்கள் உங்கள் தளத்தில் எழுதி வரும் வெண்முரசு அனைத்து மகாபாரத கதையை தொடர்ந்து அதாவது 2014 ஆண்டில் இருந்து வாசித்து வருகிறேன்.
மேலும் நீங்கள் உங்கள் தளத்தில் எழுதி வரும் வெண்முரசு அனைத்து மகாபாரத கதையை தொடர்ந்து அதாவது 2014 ஆண்டில் இருந்து வாசித்து வருகிறேன்.
மேலும் கொரோனா Lockdown காலகட்டத்தில் நீங்கள் எழுதிய அனைத்து சிறுகதை தொகுப்பும் சாலச்சிறந்தது.
உங்கள் தொகுப்புகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எந்த காலகட்டத்திலும் வாசிக்கலாம்.
நன்றி.
Comments
Post a Comment