Skip to main content

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன்...

நான் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உடன்
நான் தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். 

எனது நண்பன்
G. பாலமுருகன்

எனக்கு உங்களின் அறிமுகம் எனது நண்பன் G. பாலமுருகனால் கிடைத்தது.

உங்களுடைய அக மற்றும் புற புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.

ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. 

ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பிறகு காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி, அனல் காற்று, இன்றைய காந்தி, விஷ்ணுபுரம், கன்னி நிலம்,  பின் தொடரும் நிழலலின் குரல் என நாவல்கள். மற்றும் அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. 

ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது. 

உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் இருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று.

முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை நெருக்கமாக உணர முடியுமா என்கிற அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அடுத்த அடி,ஜகன்மித்யை. அதில் வரும் பெரியவரும் போதியில் வரும் குருவும் வேறு வேறு வேறான ஆள் என என்னால் நம்ப முடியவில்லை.

வாழ்வின் முடிவில்லாத் துயரத்தை, தாங்கள் தொலைத்த நாட்களைப் பேசும் மனிதர்கள். சிவமயம், வனம், வீடு என குறுக்கு வெட்டாகப் படித்தபடி லங்கா தகனத்துக்கு வந்து சேர்ந்தேன். ஒரு கதையைப் படிக்கும்போது மனிதனுக்கு பீதி உண்டாகும் எனச் சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன் ஆனால் இப்போது நம்புகிறேன். ஒரு குரங்கினைப் போல ஆசான் தாவியபடி வந்து கொண்டிருந்தார் என்கிற கடைசி வரி இன்னமும் எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதையை வளர்த்துப்போய்.. ஆசானின் மாற்றத்தை வாசிப்பவனுக்குக் கடத்தி, என்ன நடக்கப் போகிறது என்பதற்கான கண்ணிகளை மட்டும் ஆங்காங்கே கொடுத்துக் கடைசியில் ஒரு திறந்த முடிவாகக் கதை முடிந்தபோது ஆவென்றிருந்தது.

படித்து முடித்தவுடன் என் நண்பனூக்கு நான் அலைபேசியில் சொன்னது  என்னமா எழுதி இருக்க இருக்கார் என்று.

சத்தியமாக முடியவில்லை சார். அற்புதமான ஒரு அரசனின் வருகையைத் தெரிவிக்கும் கதை. இந்த ஒரு கதை போதும் மொத்தத் தொகுப்புக்கும். படித்து முடித்தவுடன் உங்களிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணினேன். ஆனால் என்ன உளறுவேனென்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இதை எனது Blogger-ல் எழுதி கொண்டிருக்கிறேன்.

தொகுப்பு முழுதுமே வெவ்வேறு தளங்களில் இயங்கும் கதைகள். இவற்றை இருபது வருடத்துக்கு முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்பதுதான் நம்பமுடியவில்லை.

மேலும் நீங்கள் உங்கள் தளத்தில் எழுதி வரும் வெண்முரசு அனைத்து மகாபாரத கதையை தொடர்ந்து அதாவது 2014 ஆண்டில் இருந்து வாசித்து வருகிறேன்.



மேலும் கொரோனா Lockdown காலகட்டத்தில் நீங்கள் எழுதிய அனைத்து சிறுகதை தொகுப்பும் சாலச்சிறந்தது.

உங்கள்  தொகுப்புகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எந்த காலகட்டத்திலும் வாசிக்கலாம்.

நன்றி.


Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம