எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்)
நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம்.
அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம்.
"நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்".
திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று.
நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை ஒரு எரிமலை.
நாங்கள் காலை சென்னை யில் இருந்து பேருந்து முலமாக திருவண்ணாமலை வந்தடைந்தோம்.
பிறகு காலை உணவு முடித்த பிறகு கோவிலை வந்தடைந்தோம்.
கோவில் கட்ட கலை மிக அழகாக நேர்த்தியாக ரசிக்க கூடிய தாக இருந்தது. கோவிலுக்கு வெளியே தரிசனத்திற்க்கு தேவை யான நிறைய கடைகள் இருந்தன.
இக்கோவிலின் சிறப்பம்சம் என்னன்னா, 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம்.
இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கு. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் இருக்கு.
இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
நான் அறிந்த சில குறிப்புகள்.
பதினைந்தாம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாகும்.
கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது.
அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.
மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் இருக்கு. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுது.
மேலும், இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் இருக்கு. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.
நுழைவாயிலில் காவலர்கள் சோதனை செய்த பிறகு கோவில் உள்ள அனைத்து சன்னதி சென்று சாமி தரிசனத்தை பெற்றோம்
உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) சன்னதி சென்று சாமி தரிசனம் செய்தோம்.
பிறகு கோவில் கட்ட கலையை சுற்றி பார்த்தோம்.
Comments
Post a Comment