நான் சென்னைக்கு வேளை தேடி வந்தபோது எனக்கு எந்தப் பிடிமானமும் கிடையாது.
எல்லாவற்றையும் நான் உருவாக்கிக்கொண்டேன். அப்படி உருவாக்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், “நான் உறுதியாக இருந்தால் அது நடக்கும்” என்றுதான். அதுதான் நடந்தது.
இது சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், கடந்துவரும்போது மிகத் துயரமாக, மிகக் கடுமையாக இருந்தது.
என்னை போல நீங்களும் பல கடினமான வாழ்க்கை அனுபவங்களை கடந்து வந்த நினைவுகள் உங்கள் இதயத்தில் தினமும் ஓடி கொண்டிருக்கும்.
நான் சென்னைக்கு படித்து முடித்ததும் வேலை தேடி சென்றேன். எனக்கு வேலை அவ்வளவு சீக்கிரமாக கிடைக்கவில்லை.
நான் பெரும்பாலும் சென்னை அசேக்பில்லரில் உள்ள நூலகத்தில்தான் பெரும்பாலும் இருப்பேன்.
அப்போதுதான் எழுத்தாளர் திரு S.ராமகிருஷ்ணனை நான் சந்தித்தேன்.
பிறகு அவருடனான பழக்கமும், அனுபவமும் மற்றும் அவருடைய புத்தகமும் பின்னாலில் என் வாழ்கையில்
மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவருடைய புத்தகங்களை வாசிக்கும் போது நானும் இவரை போல் பயணிக்க வேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தாக்கம் உண்டானது.
நான் இவர் ஒவ்வொரு புத்தகங்கள படித்து முடித்த பிறகு எல்லாப் புத்தகங்களும் ஒரு மிக சிறந்த அனுபவத்தை
கொடுத்தது.
இவர் நினைத்ததில் பாதி அளவு நான் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
நான் மாகாபாரதம் வாசிக்க நான் மிக ஆவலாக இருந்தேன்.
நான் என் தம்பி வினோத் ஊர் கந்தர்வகோட்டை சென்றபோது தஞ்சாவூரில் புத்தக கண்காட்சி போட்டிருப்பதாக சொன்னான்.
அங்கு எனக்கு திரு.S.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உப பாண்டவம் நாவல் கிடைத்தது. அதுவே நான் மகாபாரதம் வாசிக்க ஆரம்பபுள்ளியாக அமைந்தது. பிறகு நான் சென்னை Anna university நூலகத்தில் மாகாபாரதம் சார்ந்த நூல்களை வாசிக்க உதவியது. இப்போது நான் மகாபாரதம் சார்ந்த அனைத்து கதாபாத்திரம் நான் அறிந்த கொண்டேன்.
நான் தேனி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் பிறந்த வழர்ந்தவன்.
நான் சிறு வயதில் என் கிராம வாழ்க்கை போல். நான் அனுபத்த வாழ்க்கை முறை போல் நெடுங்குறிதி நாவலில் தன் எழுத்தால் வர்ணித்துள்ளார்.
வேம்பலை என்ற கிராமத்தின் கதைதான் நெடுங்குருதி.
வடநெல்லை முதல் மதுரைவரை கடலை ஒட்டி விரிந்து கிடக்கும் வரண்ட வானம் பார்த்த பூமியின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று அது.
அதன் அப்பட்டமான யதார்த்தம் என்பது வெயிலே. வெயிலில் வெந்து கருகிய மண்ணும் மனிதர்களும்தான். வெயிலில் வெடித்த பாறைகள், வெயில் பழுத்த மரங்கள்.
தெய்வமே கூட ‘வெயில் உகந்த அம்மன்’தான். காண்பவை எல்லாமே வெயிலை நினைவுறுத்தும் உலகம்.
பிறகு நான் அவர் எழுதிய சஞ்சாரம் நாவலை முதல் நாள் அவர் வெளியிட்ட போது முதல் நபராக நான் சென்று வாங்கினேன். மேலே உள்ள நான் அவருடன் எடுத்து கொண்ட புகைபடம் சாஞ்சாரம் நாவல் வெளியிட்டபோது.
“சஞ்சாரம்” நாவல் பெரும்பாலும் நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது.
பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள் அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.
மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிறார்கள்.
அதனால்,இந்நாதஸ்வரக் கலைஞர்கள் படும் அவமானங்கள் ஏதும் அவர்களுக்கில்லை.இதனையே திரு S.ராமகிருஷ்ணன் முக்கிய பொருளாகக் கொண்டுள்ளார்.
எத்தனை சிறப்பான கலைஞராக இருப்பினும் அவர்கள் கலைக்காக மதிக்கப்படாமல் அவர்களின் சமூகநிலையைக் கொண்டே இழிவுபடுத்தப்படுகிறார்கள்.
இதனை வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதன் மூலம் நிறுவிக்கொண்டே செல்கிறார்
மேலும் இந்த சஞ்சாரம் நாவல் 2018-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது குறிப்பிட்டதக்கது.
*****நீங்களும் உங்கள் புத்தகம் வாசிக்கும் அனுபவத்தை பதிவு செய்யுங்கள்.
Comments
Post a Comment