Skip to main content

எழுத்தாளர் திரு.S.ராமகிருஷ்ணன் உடன்

நான் சென்னைக்கு வேளை தேடி வந்தபோது எனக்கு எந்தப் பிடிமானமும் கிடையாது. 

எல்லாவற்றையும் நான் உருவாக்கிக்கொண்டேன். அப்படி உருவாக்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், “நான் உறுதியாக இருந்தால் அது நடக்கும்” என்றுதான். அதுதான் நடந்தது. 

இது சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், கடந்துவரும்போது மிகத் துயரமாக, மிகக் கடுமையாக இருந்தது.

என்னை போல நீங்களும் பல கடினமான வாழ்க்கை அனுபவங்களை கடந்து வந்த நினைவுகள் உங்கள் இதயத்தில் தினமும் ஓடி கொண்டிருக்கும்.

நான் சென்னைக்கு படித்து முடித்ததும் வேலை தேடி சென்றேன். எனக்கு வேலை அவ்வளவு சீக்கிரமாக கிடைக்கவில்லை.

நான் பெரும்பாலும் சென்னை அசேக்பில்லரில் உள்ள நூலகத்தில்தான் பெரும்பாலும் இருப்பேன்.


அப்போதுதான் எழுத்தாளர் திரு S.ராமகிருஷ்ணனை நான் சந்தித்தேன்.

பிறகு அவருடனான பழக்கமும், அனுபவமும் மற்றும் அவருடைய புத்தகமும் பின்னாலில் என் வாழ்கையில்
மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவருடைய புத்தகங்களை வாசிக்கும் போது நானும் இவரை போல் பயணிக்க வேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தாக்கம் உண்டானது.

நான் இவர் ஒவ்வொரு புத்தகங்கள படித்து முடித்த பிறகு எல்லாப் புத்தகங்களும் ஒரு மிக சிறந்த அனுபவத்தை
கொடுத்தது.

இவர் நினைத்ததில் பாதி அளவு நான் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

நான் மாகாபாரதம் வாசிக்க நான் மிக ஆவலாக இருந்தேன்.


நான் என் தம்பி வினோத் ஊர் கந்தர்வகோட்டை சென்றபோது தஞ்சாவூரில் புத்தக கண்காட்சி போட்டிருப்பதாக சொன்னான்.

அங்கு எனக்கு திரு.S.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உப பாண்டவம் நாவல் கிடைத்தது. அதுவே நான் மகாபாரதம் வாசிக்க ஆரம்பபுள்ளியாக அமைந்தது. பிறகு நான் சென்னை Anna university நூலகத்தில் மாகாபாரதம் சார்ந்த நூல்களை வாசிக்க உதவியது. இப்போது நான் மகாபாரதம் சார்ந்த அனைத்து கதாபாத்திரம் நான் அறிந்த கொண்டேன்.

நான் தேனி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் பிறந்த வழர்ந்தவன். 

நான் சிறு வயதில் என் கிராம வாழ்க்கை போல். நான் அனுபத்த வாழ்க்கை முறை போல் நெடுங்குறிதி நாவலில் தன் எழுத்தால் வர்ணித்துள்ளார்.


என்னுடைய கிராமத்தைபோல் 
வேம்பலை என்ற கிராமத்தின் கதைதான் நெடுங்குருதி. 

வடநெல்லை முதல் மதுரைவரை கடலை ஒட்டி விரிந்து கிடக்கும் வரண்ட வானம் பார்த்த பூமியின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று அது.

 அதன் அப்பட்டமான யதார்த்தம் என்பது வெயிலே. வெயிலில் வெந்து கருகிய மண்ணும் மனிதர்களும்தான். வெயிலில் வெடித்த பாறைகள், வெயில் பழுத்த மரங்கள். 

தெய்வமே கூட ‘வெயில் உகந்த அம்மன்’தான். காண்பவை எல்லாமே வெயிலை நினைவுறுத்தும் உலகம்.

பிறகு நான் அவர் எழுதிய சஞ்சாரம் நாவலை முதல் நாள் அவர் வெளியிட்ட போது முதல் நபராக நான் சென்று வாங்கினேன். மேலே உள்ள நான் அவருடன் எடுத்து கொண்ட புகைபடம் சாஞ்சாரம் நாவல் வெளியிட்டபோது.


நான் இந்த நாவலை பற்றி சொல்ல வேண்டும்.

“சஞ்சாரம்” நாவல்  பெரும்பாலும்  நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது.

பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள்  அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.

மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிறார்கள்.

அதனால்,இந்நாதஸ்வரக் கலைஞர்கள் படும் அவமானங்கள் ஏதும் அவர்களுக்கில்லை.இதனையே திரு S.ராமகிருஷ்ணன் முக்கிய பொருளாகக் கொண்டுள்ளார்.

எத்தனை சிறப்பான கலைஞராக இருப்பினும் அவர்கள் கலைக்காக மதிக்கப்படாமல் அவர்களின் சமூகநிலையைக் கொண்டே இழிவுபடுத்தப்படுகிறார்கள்.

இதனை வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதன் மூலம் நிறுவிக்கொண்டே செல்கிறார்


மேலும் இந்த சஞ்சாரம் நாவல் 2018-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது குறிப்பிட்டதக்கது.

*****நீங்களும் உங்கள் புத்தகம் வாசிக்கும் அனுபவத்தை பதிவு செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம