Skip to main content

வாழ்க்கை


வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக, வெல்வதற்காக நிகழ்வது என்ற எண்ணத்திலிருந்துதான் பலவிதமான பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. வாழ்க்கையின் இளமைப்பருவத்தில் நாம் நம் வாழ்க்கை ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்கான கருவி என்ற எண்ணத்திற்கு ஆட்படுகிறோம் அதீத உற்சாகத்துடன் பலவற்றில் ஈடுபடுகிறோம்.


ஒருவர் உலகியல்சார்ந்த எந்த விஷயத்திலும் ஒற்றைப்படையான தீவிரத்துடன் ஈடுபட்டாரென்றால் அவர் ஒரு வெறுமையைச் சந்திப்பது உறுதி. அதில் அவர் வென்றாலும் தோற்றாலும். வாழ்க்கை என்பது அதன் பல்வேறு கூறுகள் நடுவே உள்ள சமநிலையாலானது.


வாழ்க்கையின்போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச்சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம்பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன.


அந்தப் புரிதலை அடையும்போது வாழ்க்கையை ஒரு நோக்கத்துடன் செலவிட்டவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். வாழ்க்கை வீணாகிவிட்டதாக உணர்கிறார்கள். முடிந்துவிட்டதென்ற எண்ணத்தை அடைகிறார்கள்.


என் வாழ்க்கையிலும் நான் என் உடல் மற்றும் மனம் சார்ந்த பல ஏமாற்றங்கள், தேவதனைகள் மற்றும் துன்பங்கள் அடைந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்று பலமுறை நான் நினைத்து கொண்டு இருப்பேன். நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் தற்கொலைசெய்யும் நோக்குடன் அதிகாலை வீட்டைவிட்டுக்கிளம்பிப் பக்கத்தில் உள்ள நுங்கபாக்கம் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து கோடம்பாக்கம் அடைந்தேன் ஆனால் சாவதற்கு படிக்கவில்லை.


ஆழ்மனம் தற்கொலைசெய்ய விரும்பவில்லை என இன்று ஊகிக்கிறேன். அது வாழ்வதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கவேண்டும். ஆகவே ஒரு திறப்பு நிகழ்ந்தது. நான் இலைநுனியில் உடலே ஒளியாக அசைந்த ஒரு புழுவைக் கண்டேன். அது ஒரு தரிசனம்.


அன்று அறிந்தது என்ன என்று புறவயமாகச் சொல்லமுடியாது. ஆனால் வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன் என


அதன் பின் இத்தனை வருடங்களில் எனக்குத் துயரம் என எதையும் நிகழ நான் அனுமதித்ததில்லை. சற்றே மனச்சோர்வு வந்தாலும்கூட ‘நேரமில்லை…இதற்கான நேரம் எனக்கு ஒதுக்கப்படவிலலை என்றே சொல்லிக்கொள்வேன். வீணடிக்க நேரமில்லை என்ற பிரக்ஞையே என்னை உருவாக்கியது என்று நினைக்கிறேன்


நான் என் கனவுகளில் மகத்தான வாழ்க்கையை வாழமுடியுமென அறிந்தேன். எழுதுவதும் வாசிப்பதும் அந்தக் கனவை நிகழ்த்திக்கொள்வதற்கே. பயணம்செய்வதும் உரையாடுவதும் அக்கனவில் வாழ்வதற்கே. வாழ்நாளின் ஒவ்வொரு துளியையும் வீணாக்காமல் எனக்கு இனிய விஷயங்களால் நிறைத்துக்கொள்ள முயன்றேன்


அப்போது தெரிந்தது இந்த வாழ்க்கை போதாது என. நான் வாசிக்காத நூல்கள்,எழுதவேண்டிய நாவல்கள்,செல்லவேண்டிய ஊர்கள் விரிந்துபரந்துகிடக்கின்றன. இருபத்தைந்து வருடங்கள் இமைப்பொழுதாக ஓடிவிட்ட்ன. இன்னும் அதேயளவு நேரம் கிடைத்தால் நான் ஆசிபெற்றவன்


ஒருவேளை அந்த சிருஷ்டிசக்தி என்னிடம் கேட்டால் ‘நீ இன்னும்கூட எனக்கு அள்ளிக்கொடுக்கலாம். ஏனென்றால் நீ கொடுத்த எதையும் நான் வீணடிக்கவில்லை’ என்று என்னால் சொல்லமுடியும்.


*****வாழ்க்கை வாழ்வதற்கே

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம