உத்தேசிக்கும் பயணம் என்பது ஒரு திறந்த அனுபவ வெளி.
அங்கே துன்பமும் இன்பமும் அனுபவங்களே.
சிக்கல்களும் பிரச்சினைகளும் கூட அனுபவங்களே.
அவ்வனுபவங்களை தேடித்தான் பயணம் செய்கிறோம்.
அவை நிகழும்போது நமக்கு அச்சமும் பதற்றமும் கோபமும் எல்லாம் ஏற்படலாம்.
ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவையும் நம் பயண அனுபவத்தைச் செழுமைப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
அனைத்துவகையான அனுபவங்களுக்கும் நம்மை திறந்து விடுவதே பயணம் என்பது.
அந்தமனநிலை நமக்கு இருக்குமென்றால் எல்லாவற்றையுமே ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.
வழிதவறுவது, வண்டி உடைந்துவிடுவது, தங்க அறையில்லாமல் தெருவில்நிற்பது எல்லாமே சுவாரசியமாக ஆகிவிடும்.
Happy friendship day...
Comments
Post a Comment