தென்றல் போல் மரணம் உடலை தழுவி ஆன்மாவை அழைத்து செல்லும்... மரணம் பயமா...? இல்லை அதிசயம்.... பிறப்பு மாதிரி இறப்பும் அதிசயம்... இந்த உடலைப் பார்க்கும்போது இந்த ஷணம் அதிசயம்தான் "ஹா" என்று நிற்கிறது... எனக்கு மரணம் உண்டு இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ... ஒரு நாள் என் இருப்பு வெற்றிடமாகும். என் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, கோபம், தாபம், மோகம் எல்லாம் பொய்யாகும். ஒருவேளை பயம் மட்டும் என்னோடு வரும்மா...? ஒருவேளை உயிரின் ஒரே குணம் பயமோ...? அடுத்தது என்ன என்கிற பயம் தொடருமோ...? மறுபடி மறுபடி பிறந்தது என்கிறார்களே, அதுபோல மறுபடி எங்கே பிறக்கப் போகிறோம் என்கிற பயம் உயிருடன் ஒட்டியிருக்குமோ...? அப்போது பேரானந்தம் என்பது என்ன...? அட எது வேணா நடக்கட்டும் என்கிற நிலையா...? எப்ப வேணா நடக்கும் என்கிற தெளிவா...? எது நடப்பினும் சரி என்கிற குணமா...? இந்த ஷணம் எனக்குள் அப்படித்தான் இருக்கிறது... எவரோடும் எதனோடும் ஒட்டாத நிலை இருக்கி இருக்கிறது... இப்படி நடந்திடும் எனக்கு என்று அழுகையில் எதிர்ப்பு காட்டிப் போராடுகிற குணமும் இல்லை... அப்பா... இது விடுதலை என்று போற்றுகிற குணமும்