Skip to main content

உயிர்பலி இறைவனால் விரும்பப்படுகின்றதா...?!

 

உயிர்பலி இறைவனால் விரும்பப்படுகின்றதா...?!


சிலர் தன்னுடைய விருப்பம் நிறைவேற அல்லது தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் பெயரை சொல்லி அவருக்கு விலங்குகளை பலியிடுகின்றார்கள் ஆனால் இறைவன் அதை ஏற்கின்றாரா இறைவனுக்கு விருப்பமானது ஒரு விலங்கின் உடலா?

 உயிரைப் போக்க பட்ட மாமிசம் இறைவனுக்கு பிரசாதம் ஆக முடியுமா. இறைவன் தனது குழந்தையை தனக்கே பலியிட சொல்வாரா? 

ஏனென்றால் படைப்பவர் ஒருவரென்றால் உலகப் படைப்புகள் அனைத்தும் அவரது குழந்தை தானே. 

இறைவன் விரும்பும் பலி எது? 

அதை மனிதன் இறைவனுக்கு கொடுக்கின்றானா?

குடும்பத்தில் இருக்கும் தந்தை எப்படி மகன் சத்திய வழியில் செல்ல வேண்டும் தர்மத்தின் படி நடக்கவேண்டும் என்று விரும்புகின்றாரோ, அதைத்தான் இறைவனும் விரும்புகின்றார். 

நல்வழியில் நடக்கும் ஒரு மகனின் மூலம் நற்பெயர் கிடைக்கின்றது. அதுபோலவே தந்தை ஈசனும் ஆத்மாவை எந்த ஒரு தீய குணமும் அற்றதாக மாற்றவே விரும்புகின்றார். 

கடவுளின் நாமத்தை ஆயிரம் தடவை சொன்னாலும் உள் ஒன்றும் புறமொன்றுமாக இருந்தால் அதனால் என்ன பயன்?

 ஒழுக்கமான நெறியில் செல்பவரே எந்த ஒரு சூழ்நிலையிலும் அசையாதவரே மேலிருந்து பார்க்கும் கடவுளுக்கு விருப்பமானவர். இப்படிபட்டவர் எதுவாக இருந்தாலும் கடவுளுக்கு முன்னால் உட்கார்ந்து அந்த செயலை தீர்மானம் செய்கின்றார். 

அதாவது ஒவ்வொரு அடியிலும் அவருடைய வழிப்படி நடக்கின்றார். எனவே எந்த தவறுகளும் ஏற்படாதவாறு தன்னை பாதுகாத்துக் கொள்கின்றார். இப்படிப்பட்டவர் தன்னுடைய எண்ணத்தை கூட வீணானதாகவோ அல்லது உலக தர்மத்திற்கு புறம்பானதாகவோ எண்ணுவதில்லை.

 இவரைத்தான் கடவுளுக்காக பலியானவர் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட தூய்மையானவர் தனது உடல், மனம்,செல்வம் யாவற்றையும் இறைவன் தனக்கு வழங்கியதாக எண்ணி அதை தர்ம நெறியில் பயன்படுத்துவார்.இப்படிப்பட்ட ஒருவரையே தனக்கு அர்ப்பணித்தவராக இறைவன் நினைப்பாரே தவிர தனக்கு உயிர்களை பலியிடுவதாலோ அல்லது அவருக்கு அபிஷேகம் ஆராதனையெல்லாம் செய்து விட்டு பிறரை ஏமாற்றுதல், வஞ்சகம் செய்தல், துரோகம் செய்தல் இப்படி தீய குணம் கொண்ட ஒருவர் கொடுக்கும் எந்த ஒரு பொருட்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை. 

உலகில் நேர்மையாக வாழும் ஒருவரை இறைவன் மேலிருந்து பார்க்கின்றார். நேர்மையாக நடப்பேன் என்று சொல்பவரின் வேண்டுதல்கள் ஏற்கப்படுகின்றன. 

எனவே நாம் கொடுக்கக்கூடிய பலி எப்படிப்பட்ட பலி என்பதை நம்முடைய உள்ளத்தை நாமே கேட்போம்.

இன்றிலிருந்து மாற்றத்தை நமக்குள் கொண்டு வருவோம். பிறருக்கும் நமக்கும் ஏமாற்றத்தை கொண்டு வரும் எந்த ஒரு தீய செயல்களையும் நாம் செய்வதில்லை என்பதை இறைவனுக்கு முன்பாக உறுதிஎடுப்போம். 

அப்பொழுது நம்முடைய காலம் வசந்த காலமாக மாறும். துன்பம் முடிந்து இன்பம் பெருகும்.நம்முடைய தோஷங்கள் யாவற்றிற்கும் இதுவே உண்மையான பரிகாரமாகும். நல்லது. வாழ்த்துக்கள்.

 ஆத்மாவானது மனதின் மூலம் பரமாத்மாவுடன் தொடர்பு கொண்டு பரமானந்தத்தை அனுபவம் செய்யும் இராஜயோகத்தை அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் இலவசமாக கற்று மகிழ்வீர். 

வாழ்த்துக்கள். 

ஓம் சாந்தி.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...