Skip to main content

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. இடது கையில் வீணையைப் பிடித்தபடி சரஸ்வதி🍁.. சகஸ்ரலிங்கம்🙏..!!


 

அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்...!!



🍁 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...


இந்த கோயில் எங்கு உள்ளது?


🍁 தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?


🍁 தேனியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உத்தமபாளையம் என்னும் ஊர் உள்ளது. உத்தமபாளையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?


🍁 இத்தல மூலவரான காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை இருவருக்கும் இடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார்.



🍁 இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.


🍁 சிவன் சன்னதி முன் மண்டபத்தின் மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள் மற்றும் 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.


🍁 இந்த வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் அமைந்துள்ளது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. இதன் அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.


🍁 சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். இங்கு லிங்கோத்பவர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.


🍁 இக்கோயிலில் பிரம்மாவும், பெருமாளும் இருக்க அவர்களுக்கு எதிரே நந்தியும் இருக்கிறது.


🍁 இத்தலத்தில் காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர், பராசக்தி ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.


வேறென்ன சிறப்பு?


🍁 இத்தல பிரகாரத்தில் குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மிகவும் சிறப்பம்சமாக ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு-சிம்ஹிகையுடனும், கேது-சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.



🍁 நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு நடைபெறும் சர்ப்பதோஷ பரிகார ஹோம பூஜையில் கலந்து கொண்டு ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது.


🍁 இத்தல கோபுரத்தை அடுத்து சூரியன், சந்திரன் இருவரும் தாமரை மலர் மீது மனைவியருடன் காட்சி தருகின்றனர்.


🍁 இக்கோயிலில் பௌர்ணமியன்று சகஸ்ரலிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் கன்னிமூல கணபதி, விஸ்வநாதர், சொக்கநாதர், சகஸ்ரலிங்கம் ஆகியோர் காட்சி தருகின்றனர்.


🍁 இத்தலத்தில் கண்ணப்பர் கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள்.







🍁 பொதுவாக மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இத்தலத்தில் இடது கையில் வீணையைப் பிடித்தபடியும், வலது கையில் அட்சர மாலை வைத்தும் அருள்பாகிக்கிறாள்.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?


🍁 சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?


🍁 ராகு, கேது தோஷம் நிவர்த்தியாக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.


இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?


🍁 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாள், ராகு மற்றும் கேதுவிற்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...