Skip to main content

மனிதன் கடவுளை அடையும் முறை

 

சிவமயம் சிவாய நம 🙏🌺🙏


#பிரார்த்தனை  


மனிதன் கடவுளை அணுகும் முறை


  ஏழ்மையான பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நான்கு மகன்களும் இரண்டு பெண்களும் இருந்தனர். அவளுடைய கணவன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். அதனால் வீட்டில் வருமானம் ஒன்றுமில்லாமல் இருந்தது. உணவு வகைகளும், காய்கறிகளும் குறைந்துக் கொண்டே வந்தன. சமாளிக்கும் வழி தெரியாமல் கவலைப்பட ஆரம்பித்து விட்டாள். சில பருப்பு வகைகளும் காய்கறிகளும் அருகிலிருந்த மளிகைக் கடையிலிருந்துக் கடனாக வாங்கிக் கொள்ள நினைத்தாள்.


   மிகப் பணிவுடன் வீட்டு நிலவரத்தைக் கடைக்காரரிடம் எடுத்துச் சொன்னார். உதவி செய்து உணவு வகைகளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைக்காரர் உதவிச் செய்ய மறுத்துவிட்டு வேறு கடைக்குப் போகச் சொன்னார் பரிதாப நிலையைப் பார்த்த ஒரு மனிதன் பொருள்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்தார் கடைக்காரன் விருப்பமில்லாமல் அவளிடம் வாங்க வேண்டியப் பொருள்களை ஒரு காகிதத்தில் எழுதி எடையிடும் எந்திரத்தில் வைக்கச் சொன்னார் காகிதத்தின் எடைக்குச் சமமாகப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டார் அவள் கண்களை மூடிக் கொண்டு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதினாள் குனிந்த தலை நிமிராமல், அந்தக் காகிதத்தைத் தராசின் மேல் வைத்தவுடன் கனமான பாரத்தை வைத்ததைப் போல் தராசின் தட்டு கீழே இறங்கியது.


  கடைக்காரனும் உதவிக்கு வந்தவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் உணவுப் பொருள்களைத் தராசின் மற்றொரு பக்கம் வைக்கும் போது சமமாக இல்லை மேலும் நிறைய பொருள்களை வைத்தும் தராசு நகரவில்லை கடைசியில் கடைக்காரன் அந்தக் காகிதத்தை எடுத்தப் பொழுது மேலும் ஆச்சிரியப்பட்டார் அதில் பொருட்களின் பட்டியல் இல்லை கடவுளிடம் ஒரு விண்ணப்பம் தான் இருந்தது. 


“அன்புள்ள கடவுள் என் தேவைகளை அறிந்த நீங்கள் எது கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்.”


  கடைக்காரன் இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தராசில் இருந்த எல்லாப் பொருட்களையும் பணம் வாங்காமல் கொடுத்து விட்டார் அவள் நன்றி செலுத்திவிட்டுச் சென்றார். பிறகு, இந்தச் சிறிய காகிதத்தின் பாரம் தாங்காமல், தராசு உடைந்ததைக் கண்டு மேலும் ஆச்சரியப்பட்டார் கடவுளுக்குத் தான் ஒரு வேண்டுதலின் முக்கியத்துவம் தெரியும்.


  பிரார்த்தனை மூலம் ஒருவன் தன் உணர்வுகளைக் கடவுளிடம் விண்ணப்பம் செய்கிறான் தனிப்பட்ட அனுபவமும், நெருங்கிய தொடர்பும் ஏற்படுகின்றது எல்லா நேரமும் கடவுள் நம் நன்மைக்காகவே அன்புடனும் அக்கறையுடனும் பதிலளிக்கிறார் திடநம்பிக்கை உள்ளவர் கடவுளுக்கு மட்டுமே விருப்பப் படுகிறார். 


பிரார்த்தனை வழிப்பாடு மூலமாகவோ, மனதில் ஓசையற்ற முறையிலோ செய்யலாம். 


மனமார்ந்த முறையில் வழிப்பட்டால் உடனடியாகக் கடவுள் பதிலளிக்கிறார் அவரை விரும்புவோரிடம் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவராக இருப்பார்.


திருச்சிற்றம்பலம் 🙏🙏🏼🙏


சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏


அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...