Skip to main content

அசைவம் சாபிடலாமா இறை நம்பிக்கை உள்ளவர்கள்?

 

அசைவம் சாப்பிடலாமா இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???


அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????

..

இந்த கேள்வியை 

கேட்காத மனிதர்கள் இல்லை 

இதற்கு 

பதில் தராத 

குருவும் இல்லை 

ஆயினும் 

கேள்வி தொடர்கிறது 

...

பதில் 

...

உணவுக்கும் 

இறைவனுக்கும் 

எந்த சம்மந்தமும் இல்லை..

...

உணவுக்கும் 

கடவுள் கோபிப்பார் என்பதற்க்கும்

எந்த சம்மந்தமும் இல்லை...

....

உணவுக்கு 

கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் 

எந்த சம்மந்தமும் இல்லை.

...

உணவுக்கும் 

உடலுக்கும் 

சம்மந்தம் உண்டு..

..

உணவுக்கும் 

கர்மாவிற்கும் 

சம்மந்தம் உண்டு 

..

உணவுக்கும் 

குணத்திற்க்கும் 

சம்மந்தம் உண்டு 

..

உணவுக்கும் 

அவன் வாழ்விற்க்கும் 

சம்மந்தம் உண்டு...

..

உணவுக்கும் 

அவன் ஆயுளுக்கும் 

சம்மந்தம் உண்டு 

..

உணவுக்கும் 

மனதிற்க்கும் 

சம்மந்தம் உண்டு..

..

மனதிற்க்கும் 

இறைவனுக்கும் 

சம்மந்தம் உண்டு..


--------------


பாவத்தின் காரணமாக 

பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த பாவத்தை 

சரி பண்ணவே 

மனித பிறவி...

அவன் 

சொந்த கடனை அடைப்பதே 

அவனுக்கு திண்டாட்டமே 

இதில் 

தாவர உயிரினங்களுக்கு 

பாவ கணக்கு குறைவு 

மாமிச உயிரினங்கள் 

அதற்கு 

பாவ கணக்கு அதிகம் 

எந்த 

உணவை 

மனிதன் உண்டாலும் 

அந்த 

உணவான 

உயிர்களின் 

பாவ கணக்கை 

அந்த

மனிதனே அடைக்க வேண்டும்.

----------- ------------


அதிக பாசம் உள்ள 

ஆடு கோழி மீன் 

இவைகளை 

மனிதன் உண்பது 

பாச தோஷம் ஆகும். 

..

அம்மாவை தேடி அலையும் 

குஞ்சுகள் குட்டிகள் 

ஆனால் 

அதன் 

தாயை கொன்று தின்னும்

மனிதன் 

உணரவேண்டியது 

தாயின் மனம் 

அந்த குட்டியின் மனம் 

எவ்வாறு 

தேடி தவித்து இருக்கும்

அந்த தோஷத்தை 

மனிதன் 

அடைந்தே தீருவான் 

அந்த 

பாவத்தையும் சேர்த்து அடைக்க 

ஒருவன் 

தைரியமாக முன்வந்தால் 

அவன் 

தாராளமாக 

அசைவம் உண்ணலாம் 

இதில் 

கடவுளுக்கு என்ன பிரச்சனை ???

------------------ --------------

ஒருவர் 

வங்கியில் 

ஒரு லட்சம் கடன் வாங்குகிறார் 

மற்ற ஒருவர் 

ஒரு கோடி வாங்குகிறார் 

இதில் 

மேனேஜருக்கு என்ன பிரச்சனை 

கடன் வாங்கியவனே 

கடனை கட்ட வேண்டும்.

------- -------- ---------

சில நேரங்களில் 

விரதம் இருப்பது 

உடலுக்கு மட்டும் நல்லதல்ல 

பிறந்த பிறவிக்கும் நல்லதே 

அந்த விரத நாளில் 

மனிதனால் 

எந்த உயிரும் பாதிக்காததால்...

--------- ----- -------------

காட்டில் கூட

ஆடு மாடு

யானை குதிரை ஒட்டகம்

இவைகளை

மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.


புலி சிங்கம்

போன்ற அசைவ உணவு உண்ணியே

மிருகமாகிறது


சைவ உண்ணிகளுக்கு

மிருகம் என்ற பெயர் 

காட்டில் கூட இல்லை..

------ ------- ------

உடலால்

மனித பிறவி சைவம்...

உயிரால்

மனித பிறவி சைவம்...

குணத்தால்

மனித பிறவி

அசைவம் மற்றும் சைவம்.


ஆடு மாடு மான் யானை

போன்றவை

உடலால் சைவம்

உயிரால் சைவம்

மனதாலும் சைவம்.

---- ----- ----

மனித பிறவியின்

உணவு

சைவமாக இருத்தலே தர்மமாகிறது

என்பதால்

அறிவில் சிறந்த

நம்

முன்னோர்கள்

மனித பிறவிக்கு

சிறந்தது சைவம்

என வழிகாட்டி சென்றார்கள்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...