Skip to main content

சிவ பூஜை குறியீட்டு விளக்கம்


 சிவபூசை – குறியீட்டு விளக்கம்

#அட்டமூர்த்தம்.


கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத இறை எமக்கு அஷ்டதநு என்று அழைக்கப்படும் அட்ட மூர்த்தம் என்னும் எட்டு இடங்களில் வெளிப்படையாக உள்ளார் என்று சைவம் கூறுகின்றது.

 

இவ்வாறு இறை வெளிப்பட்டு நிற்கும் எட்டு அட்ட மூர்த்தங்களாவன...

 

1. பிருதுவி என்னும் நிலம் 

2. நீர். 

3. அக்கினி என்னும் நெருப்பு 

4. வாயு என்னும் காற்று 

5. ஆகாசம் என்னும் வெளி ஆகிய பஞ்சபூதங்களும் 

6. சூரியன் 

7. சந்திரன் ஆகிய இரு ஒளிமுதல்களும் 

8. அனைத்து உயிர்களுமாம். 


1. பிருதுவி என்னும் நிலம்: 


சிவபூசையில் பூமியில் இருந்து எடுத்த கல் அல்லது உலோகத்தினால் ஆன இலிங்கம் அல்லது விக்கிரக வணக்கம் பிருதுவி என்னும் பூமியில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். பூமியில் விளைந்த உணவுப்பொருட்களை வைத்து நாம் படைக்கும் நைவேத்தியமும் பூமிக்குரிய பூசையில் அடங்கும். 


2. நீர்: 


சிவபூசையில் நீரை எடுத்து கங்கா தீர்த்தமாகவும், சிவ தீர்த்தமாகவும் பாவித்துச் செய்யும் அபிஷேகம் நீரில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.


3. அக்கினி என்னும் நெருப்பு: 


சிவபூசையில் நாம் காட்டும் தீபமும், நாம் ஹோமம் வளர்த்து பூசை செய்தால் அந்த அக்கினியும் நெருப்பில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். 


4. வாயு என்னும் காற்று: 


சிவபூசையில் நாம் காட்டும் சுகந்த தூபம் வாயு என்னும் காற்றில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.


5. ஆகாசம் என்னும் வெளி: 


சிவபூசையில் நாம் ஒலிக்கும் மணி ஓசை ஆகாசம் என்னும் வெளியில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.


6. சூரியன்: 


சிவபூசையின் முன்னர் செய்யும் சூரிய பூசை சூரியனில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். 


7. சந்திரன்: 


சிவபூசையில் நாம் காட்டும் பஞ்சாராத்தியில் உள்ள ஐந்து தீபங்களும் குறிப்பது உலகின் ஒளிமுதல்களாகவுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல் அக்கினி என்பவைகளாகும். இவற்றில் இருந்து இவற்றுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் ஒளிமுதலாக உள்ள இறைக்கு செய்யும் பூசையே பஞ்சாராத்தி. 


8. ஆன்மா: 


சிவபெருமானுக்கு எட்டாவது மூர்த்தம் எமது ஆன்மா. ஒவ்வொரு ஆன்மாவிலும் அந்த ஆன்மாவின் தலைவனாக உயிர்க்கு உயிராக அதனோடு என்றும் பிரியாமல் இறைவன் உள்ளான். என்றும் பிரியாது இருப்பதால் அவனைப் #பிரான் என்பர். 


“எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம் நிரை சேரப்படைத்து 

அவற்றின் உயிர்க்குயிராய் நின்றானை” 


என்கின்றது சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல். 


எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார்.


”எல்லா உயிரும் இறைவன் திருமுன்னிலை என்று சாதகம் செய்”

என்பது சிவயோகர் சுவாமிகளின் நற்சிந்தனை வாக்கு. 


சிவபூசையில் குருவுக்கும் குரவர்களுக்கும் உரிய பூசையும், சிவனடியார்களைக்குறிக்கும் சண்டேசுர பூசையும் ஆன்மாவுக்குள் உறையும் இறைவனுக்குச் செய்யும் பூசையாம். 


"குருவில்லா வித்தை பாழ்"

"அடியார் பூசை இன்றி அரன் பூசை பலன் தராது"

என்னும் வார்த்தைகள் இதை விளக்குகின்றது.  

 

உலகனைத்தும் சிவ சொரூபம்:


கடைசியாக சண்டேசுர பூசை முடிந்தவுடன் மணி அடித்து கை தட்டி ஓசை எழுப்புதல் ஐம்பூதங்கள் எங்கிலும், சூரிய சந்திர்களிலும் நீக்கமற நிரவி வெளியாக உள்ள சட ஆகாசத்திலும், ஆன்மாக்களில் உள்ள சிதாகாசத்திலும் வியாபித்து சர்வியாபகமாய் உலகனைத்தும் சிவசொரூபமாய் உள்ள இறைவனுக்கே.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...