Skip to main content

சிவலிங்கத்தின் தத்துவம்

 

சிவலிங்கத்தின் தத்துவம்:


சிவபெருமான் அருவம், உருவம், அருஉருவம் 

என மூவகையான திருமேனிகொண்டு அருள்பாலிக்கின்றாா்.


அவற்றுள் சிவலிங்கம் அருவத் திருமேனியாகும்.

இலிங்கம் என்பதற்குத் சித்தாித்தல் என்பது பொருள்.

லிங் - லயம். 

கம்- தோற்றம்.

சங்கார காலத்தில் பிரபஞ்சங்கள் ஒடுங்கியபின் சிருஷ்ஷக்காலத்தில் அதனின்றும் உலகம் தோன்றும் எனப்படுதலினால் லிங்கம் என்பதற்குப் படைப்பு முதலியவற்றால் உலகைச் சித்தாித்தல் என்ற பொருள் பொருத்தமாகிறது.


சிவபெருமானை நாம் வழிபடுவதற்கு அடையாளமாகச் சிவலிங்கம் திருக்கோயில்களில் விளங்குகின்றது.


காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள்நாகம் அணிந்தாா்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் என்பாா் சேக்கிழாா்.


சிவலிங்கம் மும்மூா்த்தி வடிவமாக விளங்குகின்றது.

லிங்க வடிவிலுள்ள 


1) ஆவுடையாாின் அடிப்பாகம் பிரம்ம பாகம்.

 

2) நடுப்பகுதி விஷ்ணுபாகம்.


3)மேல் உள்ள பாணம் உருத்திர பாகம். 


இவை முறையே இச்சா சக்தி, கிாியா சக்தி, ஞானா சக்தி என மூன்று சக்திகளாகவும் விளங்குகின்றன.


சிவலிங்க பாணத்தின் மேல்பாகம் ஈசான முகமாகவும், கிழக்குப் பாகம் தத்புருஷமுகமாகவும், தெற்கு அகோரமுகமாகவும், மேற்கு சத்யோஜாத முகமாகவும் ,வடக்கு வாமதேவ முகமாகவும் விளங்கிச் சிவபெருமான் சதாசிவமூா்த்தமாகக் காட்சியளிக்கிறாா்.


சிவலிங்கம் ஐந்து வகைப்படும். 

அவை 


1. சுயம்புலிங்கம் - தானே தோன்றியது .


2. கணலிங்கம் - விநாயகா் முருகன் முதலிய கணநாதா்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.


3.தெய்வீகலிங்கம் - பிரமன் திருமால் இந்திரன் முதலிய தேவா்களால் நிறுவப்பெற்றது.


4.ஆாிடலிங்கம் - வசிஷ்டா் அகஸ்தியா் முதலிய ரிஷிகளாலும் அசுரா் முதலியோராலும் நிறுவப்பெற்றது.


5 மானுட லிங்கம் - மனிதா்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.


            சிவாயநம

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...