Skip to main content

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. நான்கு சக்கர வடிவங்கள்🙏.. பஞ்ச தீபாராதனை..!!


 

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்...!!



🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...


இந்த கோயில் எங்கு உள்ளது?


🙏 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?


🙏 தூத்துக்குடியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ராஜபதி என்னும் ஊர் உள்ளது. ராஜபதியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.


இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?


🙏 இத்தல மூலவரான கைலாசநாதர் லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் அமைந்துள்ளன. ஈசனின் வாகனமான நந்தி, பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.



🙏 கருவறைக்கு இடது புறத்தில் சௌந்திர நாயகி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள். 


🙏 இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாக விளங்குகிறது. கண்ணப்ப நாயனாருக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி அமைந்துள்ளது.


🙏 கண்ணப்ப நாயனார் சிலையின் உயரம் 4.5 அடி ஆகும். இவருக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன.


🙏 பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் நவகிரக சன்னதி இருக்கும். அதற்கு மாறாக இத்தலத்தில் மிகவும் சிறப்பம்சமாக நவலிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.


🙏 காளஹஸ்தி கோயிலுக்கு இணையான தலம் என்பதால் இக்கோயில் "தென் காளஹஸ்தி" என அழைக்கப்படுகிறது.


🙏 இக்கோயிலில் 63 நாயன்மார்கள், காளஹஸ்தி விநாயகர், ஆதி கைலாசநாதர், காளத்தீஸ்வரர் ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.


வேறென்ன சிறப்பு?


🙏 வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் இத்தலத்தில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும், எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர்.



🙏 பொதுவாக சிவனுக்கு தீபாராதனை மட்டும் காட்டுவர். ஆனால் இக்கோயிலில் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். 


🙏 ஏனென்றால் சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் உண்டு என்பதால் இங்கு பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர்.


🙏 இக்கோயிலின் தலவிருட்சமாக நெல்லிமரம் உள்ளது. மேலும் இக்கோயிலில் பாலாவி தீர்த்தம் அமைந்துள்ளது.


🙏 இத்தலத்தில் "நித்ய அக்னி" எனப்படும் விநாயகர், கைலாசநாதர் மற்றும் அம்பாள் ஆகியோருக்காக மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?


🙏 இத்தலத்தில் மகா சிவராத்திரி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கோயிலில் திருவாதிரை, சிவராத்திரி, மாத பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை சோமவாரம் அன்று 108 சங்காபிஷேகம், ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் என சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.



எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?


🙏 நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் மற்றும் பூஜை செய்து இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.


🙏 மரண பயம் நீங்கவும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கவும், குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் நீங்கவும், கேது தோஷத்துக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.


இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?


🙏 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந...

திருவண்ணாமலை - புண்ணியம் தேடி ஒரு பயணம்

எனது வாழ்க்கையில் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் எனது உடல், மனம் மற்றும் ஆவியை ஒருமுகப்படுத்தி நவ்வாழ்கை வழங்கியவர் என்று எனது இதயத்தில் வாழும் எனது தாய் மற்றும் தந்தை போல் என்னுடன் இருக்கும் இந்த திருவண்ணாமலை உண்ணாமுலையாள் (பார்வதி) மற்றும் அண்ணாமலையார் (சிவன்) நான் பலமுறை திருவண்ணாமலை சென்று இருக்கிறேன். எனது திருமணத்திருக்கு முன்பும், திருமணமாகி எனது மனைவி ஆறு மாத காலம் தாய்மையாக இருந்த போது நாங்கள் திருவண்ணாமலை சென்று தரிசித்து விட்டு நாங்கள் குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக வந்து தரிசிக்கிறோம் என்று வேண்டிக்கொண்டோம். அதுபோல எங்கள் மகன் சர்வேஸ்வரன் பிறந்த பிறகு நாங்கள் திருவண்ணாமலை கோவில் சென்று நாங்கள் ஆசிர்வாதம் பெற்று வந்தோம். "நம்பினால் கைவிடமாட்டார் இந்த திருவண்ணாமலையார்". திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை. திருவண்ணாமலையில் உள்ள அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது.  அந்த எரிமலை வெடித்து சிதறிய போது தீக்கு...

வெள்ளியங்கிரி மலை பயணம்...

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்தான் எங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த பயணங்கள் செய்ய வழிவகுத்தது... நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் செய்ய வேண்டும்... இந்த பூமிப் பிரபஞ்சத்தில் மிகச் சிறந்ததும், புண்ணிய பூமியுமான நம் பாரத தேசம், மிகப் பழமையானதும், சக்திவாய்ந்ததும் ஆகும். எண்ணற்ற மகான்கள் மற்றும் சித்தர்கள் மலைவாழிடங்களில் தங்களின் சக்தியாலும், தவத்தாலும் கணக்கற்ற மலைகளில் கோவில்களும், ஆன்மீக மடங்களும், பீடங்களும் நிறுவி இருக்கின்றார்கள். அங்கு நாம் செல்வதின் மூலம், நாம் நமது மனம், உடல் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் இறைவனே சுயம்புவாக வந்து குடியேறியும் உள்ளார். அப்படி எல்லாம் வல்ல ஈசனாகிய சிவபெருமான் வந்து குடியேறிய இடம் தான் நாம் பார்க்கும் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை திருத்தலம். கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சுயம்பு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் மற்றும் தியானலிங்கம் இருப்பதும் வெள்ளியங்கிரி...