Skip to main content

Posts

Showing posts from 2024

சிதம்பரம் நடராஜர் கோவிலின் அழகிய தோற்றம்...

 சிதம்பரம் நடராஜர் கோவிலின் அழகிய தோற்றம்......... 1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. 5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. 6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. 7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. 9. திருவண்ணாமலை போன்ற

மகான்கள்

 🙏🏼🔥#மகான்கள்...🙏🏼   🔥🙏🏼#மாணிக்கவாசகர்.. #மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர். இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார்.  🙏🏼#இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். 🙏🏼 🐎🔥#ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவ

கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!

 கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!  கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் மிக முக்கிய நகரமாக கருதப்படுகிறது.  இங்கு சைவ வைணவ கோயில்கள் அதிகம் உள்ளது.   கும்பகோணத்தில் மகாமகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அதுமட்டுமில்லாமல் பல ரகசிய சிறப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது கும்பகோணம். அதைப் பற்றியே நாம் இங்கு பார்க்கப்போகிறோம். கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்றது. 2. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதாலும் குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. 3. முக்கிய நதிகளான காவிரி கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ளது என்று திருநாவுக்கரசர் பாடி பெருமை சோர்த்துள்ளார். 4. சோழ மன்னர்கள் கும்பகோணத்தையே பாதுகாப்பான நகரம் என்று தங்கள் கருவூலத்தை இங்கு அமைத்தனர். 5. சூத முனிவர் என்ற முனிவர் சிவரகசியம் என்ற நூலை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்துரைத்தார். அந்த சிவரகசி

நவகைலாயங்கள் பற்றிய வரலாறு

 #சிவபெருமானுக்குரிய தமிழகத்தில் உள்ள #நவகைலாயங்கள் பற்றிய வரலாறு: தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். #புராண_வரலாறு: அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. இடது கையில் வீணையைப் பிடித்தபடி சரஸ்வதி🍁.. சகஸ்ரலிங்கம்🙏..!!   அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்...!! 🍁 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க... இந்த கோயில் எங்கு உள்ளது? 🍁 தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 🍁 தேனியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உத்தமபாளையம் என்னும் ஊர் உள்ளது. உத்தமபாளையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 🍁 இத்தல மூலவரான காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை இருவருக்கும் இடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார். 🍁 இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். 🍁 சிவன் சன்னதி முன் மண்டபத்தின் மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள் ம

அண்ணாமலையார்

 *அண்ணாமலையார்*      நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும். *பாவம் போக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்* நாம் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ பாவங்கள் செய்து இருப்போம்.  அந்த பாவங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே தீர்த்து விடுவது நல்லது.  இல்லையெனில் அந்த பாவங்கள் மூட்டையாக சேர்ந்து அடுத்தப்பிறவியிலும் தொடரக்கூடும். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. சரி.... இந்த ஜென்மத்து பாவங்களையும், கடந்த பிறவிகளில் செய்த பாவங்களையும் எப்படி போக்குவது?  இதற்காக நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிக, மிக எளிய வழி ஒன்று இருக்கிறது.  திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைவதே அந்த எளிய வழி. திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது.  விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது. அந்த வரலாறுகளை எல்லாம் சைவ எல்லப்ப நாவலர் தான் எழுதிய “அ

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. நான்கு சக்கர வடிவங்கள்🙏.. பஞ்ச தீபாராதனை..!!   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்...!! 🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க... இந்த கோயில் எங்கு உள்ளது? 🙏 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜபதி என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 🙏 தூத்துக்குடியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ராஜபதி என்னும் ஊர் உள்ளது. ராஜபதியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 🙏 இத்தல மூலவரான கைலாசநாதர் லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் அமைந்துள்ளன. ஈசனின் வாகனமான நந்தி, பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். 🙏 கருவறைக்கு இடது புறத்தில் சௌந்திர நாயகி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.  🙏 இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாக விளங்குகிறது. கண்ணப்ப நாயனாருக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி அமைந்துள்ளது. 🙏 கண்ணப்ப நாயனார் சிலையின் உயரம் 4.5 அடி ஆகும். இவருக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்த

காத்தல் & அழித்தல்

 காத்தல் & அழித்தல்  காத்தலாவது யாது? தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல். விளக்கக்குறிப்பு:  “நீ நித்திரை கொள்ளும்போது உனது மனைவி, மக்கள், ஆடு, மாடு, தோட்டம், துரவு, கடை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது யார்? ஏன் விழித்தெழுந்தவுடன் எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள்வதாக உன் தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடுகின்றாய்?”  - சிவயோகர் சுவாமிகள் வாக்கு அழித்தலாவது யாது? தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தில் ஒடுக்குதல்.   விளக்கக்குறிப்பு:   அழித்தல் என்றவுடன் பலருக்குப் பயமாக இருக்கும். ஆனால் அழித்தல் இருந்தால்தான் புத்துயிர்ப்பும் இருக்கும். உண்ட உணவு செரித்துக் கழிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். பிறந்தவர் யாவரும் இறக்காமலேயே இருந்தால் இந்தப் பூமி தாங்குமா? அழித்தல் என்பது முற்றிலும் இல்லாமல் செய்வது அல்ல.  வெளிப்படையாகப் புலனாகின்றவற்றைப் பரு உருவம் என்பர். வெளிப்படையாகப் புலனாகாதவற்றை சூட்சுமம் என்பர். பரு உருவத்தில் உள்ள தனு, கரண, புவன, போகங்களை அவற்றின் மூலப்பொருளான சூட்சுமமான மாயையிலே ஒடுக்குவது அழித்தல் ஆகும். சூட்சுமமான மாயையில் இருந்து தனு

பிறந்த திதிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள்

 *பிறந்த திதிகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :* வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.  பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள். துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேசுவது அரிது. திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள். சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள். பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள். சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வர் ஆக விருப்பப்படுவார்கள். சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்கம் குணம் உடையவர்கள். அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்கள். நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் புதுமையான தொழில்களில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்க

கருங்காலி பற்றிய பதிவுகள்

*கருங்காலி பற்றிய பதிவுகள் :* கருங்காலி என்பது ஒரு பழமையான மர வகையை சர்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த கருங்காலி மரத்தின் கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது. குறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. துவர்ப்பு தன்மை மிகுந்தது. நீரிழிவு, பெருவயிறு மற்றும் இரத்த குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் சரியாகும். கருங்காலி மரத்தின் வேரை எடுத்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை கசாயமாக காய்ச்சி வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றும். நீரிழிவு நோயாளிகள் தினமும் இருவேளை இந்த கஷாயத்தை அருந்தினால் சர்க்கரையின் அளவு குறையும். ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். பித்தத்தை குறைக்கும்.‌

சிவமயம் சிவாயநம

  சிவமயம் சிவாயநம  கூத்தனூர் சரஸ்வதி கோவில் பெருமையும் அதன் சிறப்பையும் பற்றித் தெரிந்து கொள்வோம். 1.தமிழ்நாட்டிலேயே சரஸ்வதி தேவிக்கு என்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர். 2.சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என ஸ்தலவரலாறு கூறுகிறது. 4.பகுகாந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக உள்ளது. 5.அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக் கூத்தருக்கு பரிசாக வழங்கினார். 6(ஒட்டக்)கூத்தருக்கு

ஈசன் யார்? மனிதன் யார்?

  ஈசன் யார்? மனிதன் யார்? எந்த தத்துவத்தை கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே. உயிர்தானே மனம் என மறு பெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக் கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே நான் "பிரம்மம்" என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, அதைவிட பெரியது வேறொன்றும் இல்லையோ, அதுவே நான் என்ற உணர்ந்த தெளிவு வேண்டும். நம்மை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்த போது, எதெதனோடோ நம்மை ஒப்பிட்டு இரண்டோம். ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நாமே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டால் அதுவே முடிவு நிலை. குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும்தான். உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டும்தான். உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் மட்டுமே இவை அனைத்தும் உண்டு. அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்

பிறை

  வெண்ணிற மேகங்களில்...... தன் ஒளியை பரப்பி ஊர்ந்து இரவு உலா வரும் பிறையே...🌙 உலகை உன் ஒளியால் வசியம் செய்யும் கைவண்ணம் நீ....🌙🌙🌙

மூன்றாம்_பிறை_தரிசனம்

  *#நாளை_மூன்றாம்_பிறை_தரிசனம் #அப்படி_என்ன_சிறப்பு_இதில்.?* 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙 மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை vபெற்று பிரகாசத்துடன் திகழ்வர். 🌙 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை sதிதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். 🌙 *#மூன்றாம்_பிறை #வணங்குவதால்_ஏற்படும்_நன்மைகள்* 🌙 சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண்

இராமேஸவரம் கோவிலில் அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்

  இராமேஸவரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்: ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி  பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர்  கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார் மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்த

#சிவபெருமானின் #பஞ்சபூததலங்கள்:

  #சிவபெருமானின் #பஞ்சபூததலங்கள்: நமது இந்து சனாதன தர்மத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனபது முறையே இவர்களுடைய பொறுப்பாகும் இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு.  உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.  இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும். #பஞ்சபூதம் பெயர்க்காரணம்