*கருங்காலி பற்றிய பதிவுகள் :*
கருங்காலி என்பது ஒரு பழமையான மர வகையை சர்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த கருங்காலி மரத்தின் கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.
குறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.
கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. துவர்ப்பு தன்மை மிகுந்தது. நீரிழிவு, பெருவயிறு மற்றும் இரத்த குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் சரியாகும்.
கருங்காலி மரத்தின் வேரை எடுத்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை கசாயமாக காய்ச்சி வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்.
வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றும். நீரிழிவு நோயாளிகள் தினமும் இருவேளை இந்த கஷாயத்தை அருந்தினால் சர்க்கரையின் அளவு குறையும்.
ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். பித்தத்தை குறைக்கும். கருங்காலி மரத்தின் பிசினை இடித்து பொடியாக்கி தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவாகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.
பெண்களின் கர்ப்பப்பை வலுவாக்கும். அதிக இரத்தப் போக்குள்ள பெண்களுக்கு நல்ல பலனளிக்கும். பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை படுதல் பிரச்சனையை சரிசெய்யும்.
கருங்காலி பிசின் உடலின் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரிசெய்யும். கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு குளித்தால் உடல் வலி, உடம்பு சோர்வு அனைத்தும் நீங்கும்.
கருங்காலி மாலையானது நன்றாக செதுக்கி மணிகளாக செய்து 108 மணிகளை கொண்டு மாலையாக செய்யப்படுகிறது. கருங்காலி மாலை கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.
ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது.
பொதுவாக கோயில்களின் கலசங்களில் கருங்காலி கட்டையை போடுவார்கள். எதற்காக என்றால் எப்படிப்பட்ட கதிவீச்சுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்பதற்காகத்தான்.
Comments
Post a Comment