Skip to main content

சிவ பூஜை குறியீட்டு விளக்கம்


 சிவபூசை – குறியீட்டு விளக்கம்

#அட்டமூர்த்தம்.


கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத இறை எமக்கு அஷ்டதநு என்று அழைக்கப்படும் அட்ட மூர்த்தம் என்னும் எட்டு இடங்களில் வெளிப்படையாக உள்ளார் என்று சைவம் கூறுகின்றது.

 

இவ்வாறு இறை வெளிப்பட்டு நிற்கும் எட்டு அட்ட மூர்த்தங்களாவன...

 

1. பிருதுவி என்னும் நிலம் 

2. நீர். 

3. அக்கினி என்னும் நெருப்பு 

4. வாயு என்னும் காற்று 

5. ஆகாசம் என்னும் வெளி ஆகிய பஞ்சபூதங்களும் 

6. சூரியன் 

7. சந்திரன் ஆகிய இரு ஒளிமுதல்களும் 

8. அனைத்து உயிர்களுமாம். 


1. பிருதுவி என்னும் நிலம்: 


சிவபூசையில் பூமியில் இருந்து எடுத்த கல் அல்லது உலோகத்தினால் ஆன இலிங்கம் அல்லது விக்கிரக வணக்கம் பிருதுவி என்னும் பூமியில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். பூமியில் விளைந்த உணவுப்பொருட்களை வைத்து நாம் படைக்கும் நைவேத்தியமும் பூமிக்குரிய பூசையில் அடங்கும். 


2. நீர்: 


சிவபூசையில் நீரை எடுத்து கங்கா தீர்த்தமாகவும், சிவ தீர்த்தமாகவும் பாவித்துச் செய்யும் அபிஷேகம் நீரில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.


3. அக்கினி என்னும் நெருப்பு: 


சிவபூசையில் நாம் காட்டும் தீபமும், நாம் ஹோமம் வளர்த்து பூசை செய்தால் அந்த அக்கினியும் நெருப்பில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். 


4. வாயு என்னும் காற்று: 


சிவபூசையில் நாம் காட்டும் சுகந்த தூபம் வாயு என்னும் காற்றில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.


5. ஆகாசம் என்னும் வெளி: 


சிவபூசையில் நாம் ஒலிக்கும் மணி ஓசை ஆகாசம் என்னும் வெளியில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும்.


6. சூரியன்: 


சிவபூசையின் முன்னர் செய்யும் சூரிய பூசை சூரியனில் உறையும் இறைக்குரிய பூசை ஆகும். 


7. சந்திரன்: 


சிவபூசையில் நாம் காட்டும் பஞ்சாராத்தியில் உள்ள ஐந்து தீபங்களும் குறிப்பது உலகின் ஒளிமுதல்களாகவுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மின்னல் அக்கினி என்பவைகளாகும். இவற்றில் இருந்து இவற்றுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் ஒளிமுதலாக உள்ள இறைக்கு செய்யும் பூசையே பஞ்சாராத்தி. 


8. ஆன்மா: 


சிவபெருமானுக்கு எட்டாவது மூர்த்தம் எமது ஆன்மா. ஒவ்வொரு ஆன்மாவிலும் அந்த ஆன்மாவின் தலைவனாக உயிர்க்கு உயிராக அதனோடு என்றும் பிரியாமல் இறைவன் உள்ளான். என்றும் பிரியாது இருப்பதால் அவனைப் #பிரான் என்பர். 


“எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம் நிரை சேரப்படைத்து 

அவற்றின் உயிர்க்குயிராய் நின்றானை” 


என்கின்றது சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல். 


எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார்.


”எல்லா உயிரும் இறைவன் திருமுன்னிலை என்று சாதகம் செய்”

என்பது சிவயோகர் சுவாமிகளின் நற்சிந்தனை வாக்கு. 


சிவபூசையில் குருவுக்கும் குரவர்களுக்கும் உரிய பூசையும், சிவனடியார்களைக்குறிக்கும் சண்டேசுர பூசையும் ஆன்மாவுக்குள் உறையும் இறைவனுக்குச் செய்யும் பூசையாம். 


"குருவில்லா வித்தை பாழ்"

"அடியார் பூசை இன்றி அரன் பூசை பலன் தராது"

என்னும் வார்த்தைகள் இதை விளக்குகின்றது.  

 

உலகனைத்தும் சிவ சொரூபம்:


கடைசியாக சண்டேசுர பூசை முடிந்தவுடன் மணி அடித்து கை தட்டி ஓசை எழுப்புதல் ஐம்பூதங்கள் எங்கிலும், சூரிய சந்திர்களிலும் நீக்கமற நிரவி வெளியாக உள்ள சட ஆகாசத்திலும், ஆன்மாக்களில் உள்ள சிதாகாசத்திலும் வியாபித்து சர்வியாபகமாய் உலகனைத்தும் சிவசொரூபமாய் உள்ள இறைவனுக்கே.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம