பெளர்ணமி 🙏 அன்று கிரிவலம் 🚶 செல்வதில்... அப்படி என்ன சிறப்பு? தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!
கிரிவலம் என்றால் என்ன?
கிரிவலம் :
கிரி என்றால் மலை. வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் எனப்படுகிறது. கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருவதாகும்.
கிரிவலம் பற்றி அருணாசல புராணம் :
🚶 அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🚶 இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.
🚶 திருவண்ணாமலையில் பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது வழக்கத்தில் இருக்கிறது.
🚶 ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
🚶 பொருள் வேண்டுபவர்கள் பௌர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் கிரிவலம் வரவேண்டும். திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள், யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.
🚶 இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமாக இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், மகான்களின் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம்.
🚶 கிரிவலம் சுற்றி வரும்போது சக்திமிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும், உள்ளமும் நலம் பெறுகிறது.
எப்படி கிரிவலம் செல்ல வேண்டும்?
🚶 பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும்.
🚶 நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும்.
🚶 கிரிவலம் செல்லும்போது வேகமாக செல்லாமல், மெதுவாக இறை நினைவுடன், இறை மந்திரத்தை ஜெபித்தவாறு வலம் வர வேண்டும்.
🚶 பொழுது போக்காகவோ, நட்பு உறவுகளுடன் அரட்டை அடித்தவாறோ, சுற்றுலா செல்வது போன்ற மனப்பான்மையுடனோ செல்லாதீர்கள்.
🚶 ஆண்களாக இருந்தால், மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. மேலும், பட்டு அல்லது கதர் ஆடையை அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை நீங்கள் பெற முடியும்.
கிரிவலம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்:
🚶 செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
🚶 உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
🚶 சித்தர்களின் அருளானது கிடைக்கும்.
🚶 வறுமை நீங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
Comments
Post a Comment