Skip to main content

திருச்சிற்றம்பலம் பலன்

 

*திருச்சிற்றம்பலம் எனக் கூறுவதால் என்ன பயன்*?


*தெரிந்து கொள்ளுங்கள்*!


*இரு சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்*


*சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது*


*அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே சிவபெருமான்*


*அம்பலம்= வெளி ஆகாயம்*


*நமது இதயத்தில் ஒரு சிறு இடத்தில் கட்டைவிரல் அளவில் ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன*


*மனிதனின் உள்ளம் பெருங்கோயில்! நமது உடம்பே ஆலயம்*


*திருச்சிற்றம்பலம் என்பது நம்முள் இருக்கும் ஆன்மாவே*


*நமது ஜீவனே (உயிர்) சிவம்;*


*உடலே சிவன் குடியிருக்கும் ஆலயம்*


இதை உணர்ந்த சைவப் பெரியோர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது *திருச்சிற்றம்பலம்* என்று ஒருவர் கூற, 


அதற்கு மற்றவர் *தில்லையம்பலம்* என்று கூறுவார்.


இதன் பொருள் *“உன்னுள் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறட்டும்”* என்பதாகும்.


*நம்மைப் பார்த்து யாராவது திருச்சிற்றம்பலம்* என்று சொன்னால் *“உன் ஆன்மா நிறைவு பெறட்டும்”* என வாழ்த்துகிறார்! என்று தெரிந்துக் கொள்வோம்.


*உடனே பதிலுக்கு நாமும்* *தில்லையம்பலம்* *எனக்கூற வேண்டும்*


அத்துடன் தில்லையம்பலத்தில் கோயில் கொண்ட ஆனந்தக்கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.


உருவத்தில் தினமும் அருவமாக உன் ஆன்மா கரைய வேண்டும் என்றால், 


தில்லைக்குப் போக முக்தி கிடைக்கும்! எனப் பொருள்.


இதனை உணர்த்தவே திருச்சிற்றம்பலத்தில் நடராஜ பெருமான், மனித ரூபத்தில் ஆனந்தக் கூத்தாடுகிறார்.


*மனித உடலே கோயில் தான்*


அதிலுறையும் உயிரே சிவம் என்பதைத் *தில்லையம்பலம்* உணர்த்துகிறது.


நடராசப் பெருமானின் 

விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .


மனிதன் நாள்தோறும் *21,600* தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் *72,000* நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .


*மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம்*


*சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை,எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது*


*திரை ரகசியம்*


*திரை விலகினால் ஒளி தெரியும்*


*மாயை விலகினால் ஞானம் பிறக்கும்*


*திருச்சிற்றம்பலம்* என்று

சொல்லச் சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி, 


நம் ஆன்மாவிற்குப் புண்ணியம் சேர்க்கிறோம்.


அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்குத் தெரியாது.


அதனால் நாம் *திருச்சிற்றம்பலம்* என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?


மேலும் திருச்சிற்றம்பலத்தைத் தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.


அதனால் *திருச்சிற்றம்பலம்* என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது *சிவகதி* அடைய வேண்டும் என்பதற்காக *ஒரு ரகசியமந்திரமாக* 

இதை இறைவனே 

திருச்சிற்றம் பலமுடையான் என்று தன்பெயரை 

குறிப்பிட்டான்.


எனவே *திருச்சிற்றம்பலம்* என்று சொல்லச் சொல்ல, நம்மை அறியாது செய்யும் பாவங்கள் எல்லாம் நீங்கி, நமது ஆன்மா புண்ணியம் பெறும்.


*எனவே தினமும் திருச்சிற்றம்பலம்* *என இயன்றவரை அடிக்கடி* 

*சொல்ல வேண்டும்*


*திருச்சிற்றம்பலம்*🙏

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம