Skip to main content

தினம் ஒரு தரிசனம்

 தினம் ஒரு தரிசனம்.. இடது கையில் வீணையைப் பிடித்தபடி சரஸ்வதி🍁.. சகஸ்ரலிங்கம்🙏..!!


 

அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில்...!!



🍁 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...


இந்த கோயில் எங்கு உள்ளது?


🍁 தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?


🍁 தேனியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உத்தமபாளையம் என்னும் ஊர் உள்ளது. உத்தமபாளையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.


இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?


🍁 இத்தல மூலவரான காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை இருவருக்கும் இடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார்.



🍁 இத்தல விநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.


🍁 சிவன் சன்னதி முன் மண்டபத்தின் மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள் மற்றும் 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.


🍁 இந்த வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் அமைந்துள்ளது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. இதன் அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.


🍁 சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். இங்கு லிங்கோத்பவர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.


🍁 இக்கோயிலில் பிரம்மாவும், பெருமாளும் இருக்க அவர்களுக்கு எதிரே நந்தியும் இருக்கிறது.


🍁 இத்தலத்தில் காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர், பராசக்தி ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.


வேறென்ன சிறப்பு?


🍁 இத்தல பிரகாரத்தில் குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மிகவும் சிறப்பம்சமாக ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு-சிம்ஹிகையுடனும், கேது-சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.



🍁 நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு நடைபெறும் சர்ப்பதோஷ பரிகார ஹோம பூஜையில் கலந்து கொண்டு ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது.


🍁 இத்தல கோபுரத்தை அடுத்து சூரியன், சந்திரன் இருவரும் தாமரை மலர் மீது மனைவியருடன் காட்சி தருகின்றனர்.


🍁 இக்கோயிலில் பௌர்ணமியன்று சகஸ்ரலிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் கன்னிமூல கணபதி, விஸ்வநாதர், சொக்கநாதர், சகஸ்ரலிங்கம் ஆகியோர் காட்சி தருகின்றனர்.


🍁 இத்தலத்தில் கண்ணப்பர் கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள்.







🍁 பொதுவாக மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இத்தலத்தில் இடது கையில் வீணையைப் பிடித்தபடியும், வலது கையில் அட்சர மாலை வைத்தும் அருள்பாகிக்கிறாள்.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?


🍁 சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?


🍁 ராகு, கேது தோஷம் நிவர்த்தியாக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.


இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?


🍁 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாள், ராகு மற்றும் கேதுவிற்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம