Skip to main content

மனிதன் கடவுளை அடையும் முறை

 

சிவமயம் சிவாய நம 🙏🌺🙏


#பிரார்த்தனை  


மனிதன் கடவுளை அணுகும் முறை


  ஏழ்மையான பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நான்கு மகன்களும் இரண்டு பெண்களும் இருந்தனர். அவளுடைய கணவன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். அதனால் வீட்டில் வருமானம் ஒன்றுமில்லாமல் இருந்தது. உணவு வகைகளும், காய்கறிகளும் குறைந்துக் கொண்டே வந்தன. சமாளிக்கும் வழி தெரியாமல் கவலைப்பட ஆரம்பித்து விட்டாள். சில பருப்பு வகைகளும் காய்கறிகளும் அருகிலிருந்த மளிகைக் கடையிலிருந்துக் கடனாக வாங்கிக் கொள்ள நினைத்தாள்.


   மிகப் பணிவுடன் வீட்டு நிலவரத்தைக் கடைக்காரரிடம் எடுத்துச் சொன்னார். உதவி செய்து உணவு வகைகளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைக்காரர் உதவிச் செய்ய மறுத்துவிட்டு வேறு கடைக்குப் போகச் சொன்னார் பரிதாப நிலையைப் பார்த்த ஒரு மனிதன் பொருள்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்தார் கடைக்காரன் விருப்பமில்லாமல் அவளிடம் வாங்க வேண்டியப் பொருள்களை ஒரு காகிதத்தில் எழுதி எடையிடும் எந்திரத்தில் வைக்கச் சொன்னார் காகிதத்தின் எடைக்குச் சமமாகப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டார் அவள் கண்களை மூடிக் கொண்டு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதினாள் குனிந்த தலை நிமிராமல், அந்தக் காகிதத்தைத் தராசின் மேல் வைத்தவுடன் கனமான பாரத்தை வைத்ததைப் போல் தராசின் தட்டு கீழே இறங்கியது.


  கடைக்காரனும் உதவிக்கு வந்தவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் உணவுப் பொருள்களைத் தராசின் மற்றொரு பக்கம் வைக்கும் போது சமமாக இல்லை மேலும் நிறைய பொருள்களை வைத்தும் தராசு நகரவில்லை கடைசியில் கடைக்காரன் அந்தக் காகிதத்தை எடுத்தப் பொழுது மேலும் ஆச்சிரியப்பட்டார் அதில் பொருட்களின் பட்டியல் இல்லை கடவுளிடம் ஒரு விண்ணப்பம் தான் இருந்தது. 


“அன்புள்ள கடவுள் என் தேவைகளை அறிந்த நீங்கள் எது கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்.”


  கடைக்காரன் இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தராசில் இருந்த எல்லாப் பொருட்களையும் பணம் வாங்காமல் கொடுத்து விட்டார் அவள் நன்றி செலுத்திவிட்டுச் சென்றார். பிறகு, இந்தச் சிறிய காகிதத்தின் பாரம் தாங்காமல், தராசு உடைந்ததைக் கண்டு மேலும் ஆச்சரியப்பட்டார் கடவுளுக்குத் தான் ஒரு வேண்டுதலின் முக்கியத்துவம் தெரியும்.


  பிரார்த்தனை மூலம் ஒருவன் தன் உணர்வுகளைக் கடவுளிடம் விண்ணப்பம் செய்கிறான் தனிப்பட்ட அனுபவமும், நெருங்கிய தொடர்பும் ஏற்படுகின்றது எல்லா நேரமும் கடவுள் நம் நன்மைக்காகவே அன்புடனும் அக்கறையுடனும் பதிலளிக்கிறார் திடநம்பிக்கை உள்ளவர் கடவுளுக்கு மட்டுமே விருப்பப் படுகிறார். 


பிரார்த்தனை வழிப்பாடு மூலமாகவோ, மனதில் ஓசையற்ற முறையிலோ செய்யலாம். 


மனமார்ந்த முறையில் வழிப்பட்டால் உடனடியாகக் கடவுள் பதிலளிக்கிறார் அவரை விரும்புவோரிடம் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவராக இருப்பார்.


திருச்சிற்றம்பலம் 🙏🙏🏼🙏


சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏


அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம