ஈசன் யார்?
மனிதன் யார்?
எந்த தத்துவத்தை கடவுள் என்று சொல்லுகிறோமோ,
அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.
உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது.
மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே.
உயிர்தானே மனம் என மறு பெயர் பெற்றிருக்கிறது.
உயிரோ அணுக் கூட்டம்.
அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே நான் "பிரம்மம்" என்பது தெளிவாகிறது.
நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும்.
எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, அதைவிட பெரியது வேறொன்றும் இல்லையோ, அதுவே நான் என்ற உணர்ந்த தெளிவு வேண்டும்.
நம்மை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்த போது, எதெதனோடோ நம்மை ஒப்பிட்டு இரண்டோம்.
ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நாமே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டால் அதுவே முடிவு நிலை.
குறுகி நின்றால் விரிவு இல்லை.
விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும்தான். உயர்வு இல்லை.
உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டும்தான். உணர்வு, முழுதுணர்வு இல்லை.
உணர்ந்து நின்றால் மட்டுமே இவை அனைத்தும் உண்டு.
அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான்.
கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய்,
உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்ட தாய்,அறிவு நிலையாய்,
அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய்,
இறுதியில் தானே பிரம்மம், ஈசனாய் இருப்பதை உணருகிறான்.
வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போர்க்கு பட்டயம் எதற்கடி குதம்பாய்?
இறையே குருவே சரணம் சரணம்.
Comments
Post a Comment